உடன் பிறப்புக்களே மெதுவாக குதியுங்கள்

மோடியினையும் பாஜகவினையும் மானாவாரியாக தூற்றிகொண்டிருக்கின்றனர் திமுகவினர்

இதில் சிலர் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களை எல்லாம் செய்கின்றனர்

ஒரு விஷயத்தை மறக்கின்றனர்

அரசியல் என்பது காலத்தை பொறுத்தே செய்யபடுவது, நிரந்தர பகையோ நட்போ அதில் இல்லை

தங்களை மிசாவில் போட்டு சாத்தி சிலரை கொன்ற இந்திராவுடனே பின்னாளில் கூட்டணி வைத்த கட்சி திமுக‌

காமராஜரை கண்டபடி பேசிவிட்டு பின் எமெர்ஜென்சியின் பொழுது அவரையே போராட் அழைத்த கட்சி திமுக, காமராஜர் தந்திரமாக நகர்ந்தார்.

அப்படிப்பட்ட மோடியோடு எல்லாம் கூட்டணி வைக்காது என அறிவாலயத்து மீதெல்லாம் சத்தியம் செய்ய முடியாது

இந்திராவினை சேலை கட்டிய இந்திரா, மூதேவி, காந்தாகினி, பூதகி, விதவை என்றெல்லாம் பேசிவிட்டு பின் நேருவின் மகளே வருக என பல்டி அடித்த கட்சி அது

அவர்களை சொல்லியும் குற்றமில்லை, அரசியல் என்பது அப்படித்தான் காலத்திற்கேற்ப நகர்வுகள் அவசியம்

பின்னாளில் எதுவும் நடக்கலாம்

அன்று திமுக தலமையோடு தமிழிசை, எச்.ராசா , எஸ்வீ சேகர் எல்லாம் வரிசையில் நிற்கலாம்

அதை காணும் காட்சியும் நிச்சயம் வரலாம், வாய்ப்பு இருக்கின்றது

இன்று குதித்துகொண்டிருப்பவர்கள் எல்லாம் அன்று முகத்தை எங்கே வைப்பார்களோ தெரியாது

ஆக உடன்பிறப்புக்களே மெதுவாக குதியுங்கள், இல்லாவிட்டால் பின்னொரு நாளில் முகத்தை மூடவேண்டி இருக்கும்