உட்கட்சி குழப்பத்திற்கும், குடும்ப சண்டைக்குமா மோடி பெயரை இழுக்க வேண்டும்?

ஒரு கும்பல் இந்த மோடியும் அமித்ஷாவும் அழகிரியினை தூண்டி விடுகின்றார்கள் என சொல்லிகொண்டிருக்கின்றன‌

அழகிரி என்பவர் வைகோ பிரிவினை தொடர்ந்து கட்சிக்குள் வந்தவர், மோடியா கொண்டுவந்தார்?

தா.கிருட்டினன் கொலையில் மோடியா தப்புவித்தார்?

இன்னும் ஏராளமான சர்ச்சைகளில் அழகிரி சிக்கும்பொழுது மோடியா காத்தார்?

தினகரன் பத்திரிகை அலுவலகத்தை மோடியா எரிக்க சொன்னார்? அவரா கருத்துகணிப்பு நடந்த்த சொன்னார்?

இந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் எல்லாம் டெல்லியிலிருந்தா மதுரைக்கு வந்தார்கள்?

கட்சிக்குள் அழகிரியினை இழுத்தது கலைஞர், அவரை வைத்து சில வெற்றிகளை பெற்றதும் அவரே

அழகிரிக்காக மாறன் குடும்பத்தையே ஒதுக்கி வைத்ததும் கலைஞர்

அழகிரி பற்றி தினகரன் பத்திரிகை அவதூறு எழுதும் பொழுது அழகிரி என் ரத்தம் என சீறியவர் கலைஞர், மறுக்க முடியுமா? இல்லை மறக்கத்தான் முடியுமா?

அழகிரியினை மத்திய அமைச்சராக்கி மகிழ்ந்ததும் கலைஞர், அந்த சோகமான காலகட்டங்களை நினைத்துத்தான் மன்மோகன்சிங் சென்னை பக்கமே வருவதில்லை

கலைஞர் நினைத்திருந்தால் அழகிரி பிரச்சினையினை நொடியில் தீர்த்திருக்க முடியும், ஆனால் மிக சிறந்த அரசியல்வாதியான அவர் அழகிரியின் மிரட்டல் சில இடங்களில் தேவை என்பதால் அதை செய்யவில்லை

இன்று கலைஞர் இல்லா நிலையில் திமுக எனும் கலைஞரின் பிரைவேட் கம்பெனியில் தனக்கான பங்கை கேட்டு நிற்கின்றார் அழகிரி

அழகிரி விஷயத்தில் முழு குழப்பமும் கலைஞர் செய்தது, அவரே பொறுப்பு

இதில் எங்கிருந்து மோடி வந்தார்? எங்கிருந்து அமித்ஷா வந்தார்?

இவர்கள் செய்த குழப்பத்தின் விளைவுக்கு மோடி எங்கிருந்து பொறுப்பாவார்?

எதற்கெடுத்தாலும் மோடி , அமித்ஷா என கத்துவதே இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது

உட்கட்சி குழப்பத்திற்கும், குடும்ப சண்டைக்குமா மோடி பெயரை இழுக்க வேண்டும்?

தகப்பன் சொத்துக்கு மகன் வந்து நிற்பது சாதாரண விஷயம், அழகிரி தன் தந்தையார் கம்பெனியில் தனக்கான பங்கு கேட்டு வந்திருகின்றார்.

இதில் மோடி சூது என்ன?

இப்படியா அரசியல் செய்ய வேண்டும்?


கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத மிகபெரும் வீழ்ச்சியினை இந்திய ரூபாய் அடைந்திருக்கின்றது

மிகபெரும் வீழ்ச்சி, இதற்கு யார் முழுகாரணம் என்றால் அந்த ஏழைதாயின் மகன்

ஆனால் கொஞ்சமும் வெட்கமும் மானமும் இன்றி நாளை என் ஆட்சியில் இந்தியா மிக முன்னேறிற்று என சுதந்திர தின உரை ஆற்றுவார் பாருங்கள்

அது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியினை விட பெரும் அவமானம்