உணர்ச்சி போய்விட்ட இனமாயிற்று தமிழினம்

Image may contain: 1 personஒரு வழியாக கிட்டதட்ட 37 ஆண்டுகாலம் ஜிம்பாப்வேயினை ஆட்சி எனும் பெயரில் நாசம் செய்த முகாபேயினை கழுத்தை பிடித்து தள்ளிவிட்டார்கள், புது அதிபர் விரைவில் நியமிக்கபடுவாராம்

சரி இந்த முகாபே என்ன ஆவார் என்றால் அவரை நாடு கடத்திவிடுவார்களாம், அதாவது ஏற்கனவே அடுத்த நாட்டில் அவர் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களை அனுபவிக்க கிளம்பிவிடுவார்

உள்நாட்டில் அவர் குவித்த சில சொத்துக்களை அரசு எடுத்துகொண்டு , மீட்டதாக அறிவித்துவிடும்

தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே எல்லாம் வெள்ளையன் மிக வளமாக வைத்திருந்த நாடுகள், இன்று சுதந்திர கோலத்தில் தரித்திரம் பிடித்துவிட்ட நிலை

அன்றே சொன்னார் ராஜாஜி

Image may contain: 3 people, people smiling, close-up“இன்று வெள்ளையனை விரட்டுகின்றோம், கொஞ்சநாள் ஆர்பரிப்போம், ஆனால் மக்களாட்சியின் மகத்துவம் தெரியாத நமது மக்களை வைத்து ஒரு வளர்ச்சியும் கண்டுவிட முடியாது. அரசர்களின் கீழே வாழ்ந்துவிட்ட இச்சமூகம் , மக்களாட்சியின் மகத்துவத்தை உணராது

ஊழலும், கொள்ளையும் அதிகரிக்கும். குட்டி ராஜாக்கள் தோன்றுவார்கள், நாடு நாசமாய் போகும், வெள்ளையன் ஆட்சி எவ்வளவு பரவாயில்லை என ஏங்குவோம்”

நடக்கும் காட்சிகளை கண்டால் ராஜாஜி சொன்னதன் அர்ததம் விளங்குகின்றது, வெள்ளையன் ஆட்சியில் சொர்க்கபுரியாக விளங்கிய எத்தனையோ நாடுகள் இன்று நாசமாய் சீரழிந்து கிடக்கின்றது

அவ்வளவு ஏன்?

தமிழகத்தில் மட்டும் என்ன வாழ்கின்றது? சசிகலா கும்பல் குவித்திருக்கும் கோடிகள் தலைசுற்ற வைக்கின்றன.

ஒருவேளை தமிழகம் தனிநாடாக இருந்திருந்தால், ஜிம்பாப்வே போலத்தான் பாடுபட்டுகொண்டிருக்க வேண்டும். அங்காவது முகாபியினை பிடித்து விரட்டியாயிற்று

இங்கோ புரட்சி தலைவி வாழ்க, மக்கட் செல்வன் வாழ்க, தியாக தலைவி வாழ்க என குரல்கள் கேட்கின்றன‌

பிலிப்பைன்ஸில் கூட எமல்டாவின் ஊழல் வெளிவந்தபின் அந்த பெண்மணி வெளி வரவே இல்லை

தென் கொரிய பிரதமர் தன் உடன்பிறவா சகோதரியுடன் இணைந்து ஆடிய ஆட்டம் வெளிவந்தபின் காரி துப்பி மக்கள் அடித்துவிரட்டிவிட்டார்கள்

பின் தங்கிய ஆப்ரிக்கர்கள் கூட சிந்தித்து ஊழல் தலைவனை அடித்து விரட்டியாயிற்று

கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்தகுடி இன்னும் எப்படி போயஸில் சோதிக்கலாம்? மத்திய அரசு எல்லை மீறுகின்றது, அது கோவில் என பேசிகொண்டிருக்கின்றது

ஆக ஆப்ரிக்கனை விட அறிவு மங்கி, உணர்ச்சி போய்விட்ட இனமாயிற்று தமிழினம்