உண்ணாவிரத அரசியல்…
அக்கட்சியினர் பெரும்பாலும் பொதுபிரச்சினைக்கு போராடமாட்டார்கள், பெரும் போராட்டமெல்லாம் நடத்தமாட்டார்கள், ஆனால் தேர்தலில் மட்டும் ஜெயிப்பார்கள்
அவர்கள் பிதாமகன் எம்ஜிஆர் உண்ணாவிரதம் இருந்தது ஒருமுறை இந்திரா தமிழகத்திற்கு அரிசியினை குறைத்தார் என்பதர்காக
இன்னொருமுறை ஈழத்தில் படுகொலை நடந்தது என்பதர்காக. ஆனால் அவர்தான் முதல்வர், அவர் ஏன் பதவியினை ராஜினாமா செய்ய கூடாது என ஒருபயலும் கேட்கவில்லை, அவர் ஜாதகம் அப்படி
1993ல் ஜெயலலிதா ஒருமுறை உண்ணாவிரதம் இருந்தார், அது காவேரிக்காக, அப்போது அவர்தான் முதல்வர்
அதன்பின் அக்கட்சியினர் உண்ணாவிரதம் இருந்ததெல்லாம் அம்மாவினை விடுதலை செய் என நீதிமன்றத்திற்கு எதிரான உண்ணாவிரதம், போராட்டம், அழிச்சாட்டியம்.
இன்று பன்னீர்செல்வம் அவர்கள் முன்னாள் தலைவி மரணத்திற்கு நீதிகேட்டு உண்ணாவிரதம் இருக்கின்றாராம்
நீதி என்றால், ஜெயலலிதா மருத்துவமனை செல்வது முதல் புதைக்கபடும் வரை அருகிருந்த சசிகலாவின் மீது விசாரணை வேண்டும் என்பது பொருள்
ஆக மகளிர் தினத்தில், ஒரு பெண்ணின் மரணத்திற்கு, இன்னொரு பெண்ணை விசாரிக்க சொல்லி உண்ணாவிரதம் இருக்கின்றார் முன்னாள் முதல்வர்
கொஞ்சம் ஓவராகத்தான் தமிழ்நாடு பெண்ணுரிமை கொடுத்துவிட்டது போல…