உண்மைகளை பேசினால்?
உண்மைகளை பேசினால் இப்பக்கம் சங்கி என்கின்றார்கள், அப்பக்கமோ பிரியங்காவினை வரவேற்றால் காங்கிரஸ் என்கின்றார்கள்
கலைஞரின் ஒருபக்கத்தை சொன்னால் மகிழ்கின்றார்கள் இன்னொரு பக்கத்தை சொன்னால் முறைக்கின்றார்கள்
டிடிவி தைரியமானவர் என்றால் அவரிடம் டோக்கன் வாங்கிவிட்டாயா? என்கின்றார்கள். பழனிச்சாமி ஆட்சியிலும் நல்ல திட்டம் உண்டு என்றால் ஆரிய அடிவருடி என்கின்றார்கள்
எதையும் பேசமுடிவதில்லை..
ஒரு மனிதன் பொதுவான நியாயத்தை சொல்லவும் கட்சி அடையாளம் வேண்டுமாம், அதை சுமக்காதவன் பைத்தியக்காரனாம்
ஆக கட்சி அடையாளமில்லாதவன் அரைமனிதன்
அதனால் ஒரு கட்சி அடையாளம் கண்டிப்பாக தேவை போலிருக்கின்றது