உண்மைகள் உறங்காது, பொய்மையும் கயமையும் வெல்லாது

18 வயதில் கருணாநிதி ஏ பார்ப்பானியமே, ஏ பண்ணையாரே, ஏ காங்கிரஸே என கேள்வி கேட்டால் அது புரட்சி, திராவிட எழுச்சி

அதே கேள்விகளை மதன் ரவிசந்திரன் என்பவர் இளவயதிலே கேட்டால் அவரை வேலையினை விட்டு விரட்டுவார்கள், ஓட ஓட அடிப்பார்கள்

மாரிதாஸ் கேட்டால் கொல்வோம் என்பார்கள்

ஆக வரலாறு கூறும் உண்மை என்ன?

அன்றே அண்ணாவினையும் கருணாநிதியினையும் பிராமண மற்றும் இந்துசமூகத்தால் ஓடவிட்டு அடித்திருந்தால் தமிழகத்தில் இவ்வளவு குழப்பம் மிஞ்சி இருக்காது

ஆக பிராமண மற்றும் இந்து சமூகத்துக்கு பெருந்தன்மை இருந்தது, தங்களிடம் உண்மை உண்டு என்ற நம்பிக்கை இருந்தது அவர்கள் போக்கில் இருந்தார்கள்

இன்றை திமுகவிடம் உண்மையும் இல்லை , பெருந்தன்மையுமில்லை அது அஞ்சி பதறுகின்றது

உண்மைகள் உறங்காது, பொய்மையும் கயமையும் வெல்லாது.