உண்மையான போராளிகளை அழைத்து வைத்து விருது கொடுத்து அழகு பார்த்தது

அந்த சோவியத் யூனியன் உண்மையான நாத்திகர்களையும், மானிடத்தின் உயர்வுக்கு போராடும் உண்மையான போராளிகளை அழைத்து வைத்து விருது கொடுத்து அழகு பார்த்தது

உலகின் முதல் பொதுவுடமை மற்றும் நாத்திக பூமியாக அது வல்லமையோடு விளங்கிய காலமது

ஒரு நாளும் அது ஈரோட்டும் ராம்சாமியினை கண்டுகொள்ளவே இல்லை, ராம்சாமி அரசியல் உள்நோக்கம் கொண்ட அயோக்கிய போலி நாத்திகவாதி என்பதில் கவனமாய் இருந்தது

ராம்சாமி வலிய மாஸ்கோவுக்கு சென்று நான் இந்தியாவின் சீர்த்திருத்தவாதி ஹிஹிஹி என தலையினை சொறிந்துகொண்டு நின்றபொழுது நக்கல் சிரிப்பு சிரித்துவிட்டு அதன் போக்கில் இருந்தது சோவியத் யூனியன்

ராம்சாமிக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானம் அது, ஆனால் வழக்கமான பாணியில் துடைத்துகொண்டார்

அதன்பின் ராம்சாமி மாஸ்கோ பக்கமே செல்லவில்லை

ராம்சாமி & கோவினை போராளிகளாக, சமூகநீதி காவலர்களாக ஒரு காலமும் அந்த பொதுவுடமை வல்லரசு ஒப்புகொள்ளவில்லை

அவர்கள் என்றல்ல, மாவோவின் சீனாவோ, காஸ்ட்ரோவோ மருந்துக்கும் இவர்களை சீண்டவில்லை, இது நாடக கம்பெனி என்பது அவர்களின் தீர்க்கமான முடிவு

சோவியத் காமராஜரை ஏழை பங்காளன் என கண்டது, வலிய அழைத்து பெருமைபடுத்தியது

ராம்சாமி, அண்ணா மற்றும் தன்னை அழைக்காத சோவியத் காமராஜரை அழைத்ததை கண்டு பொங்கிய கருணாநிதி எழுதிய வார்த்தைதான் “இந்தியா ரஷ்யாவுக்கு எருமை தோலை ஏற்றுமதி செய்தது, இப்பொழுது எருமையினையே அனுப்புகின்றது”

ஆம் தங்களை போராளிகளாக அந்த நாடு கருதவில்லை எனும் வலியிலும் அவமானத்திலும் வந்த கதறல் இது

திராவிட கூப்பாடு இந்தியாவில் அமெரிக்க கைகூலியாக நடத்தபடும் நாடகம் என்பது அந்நாளைய ரஷ்ய உளவுதுறையான கேஜிபியின் அறிக்கை

ஆம், இந்திய அரசியலை தாண்டி உலக அரசியலை படியுங்கள், ஈரோட்டு ராம்சாமி & கோ படுமோசமான ஏமாற்று நாடக கும்பல் என்பதை உலகமே உணர்ந்திருந்தது தெரியும்..