உண்மை நிதி நிலை பெரும் விவகாரமானது
‘கடந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சியை குறிக்கும், ஜி.டி.பி., எனப்படும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு தான் காரணம் என்று கூறுவது தவறு ” : அருண் ஜேட்லி
அந்த செல்லாத நோட்டு காரணத்தை விடுங்கள், பல்வேறு காரணம் என சொன்னதை சொல்லுங்கள்?
என்ன பல்வேறு காரணம்? அரசின் திறமையின்மையும் , இந்நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையுமன்றி வேறென்ன?
உலகெல்லாம் பிரதமர் ஓடுகின்றார், பல்வேறு அறிவிப்புகளை இரும்புகரம் கொண்டு நிறைவேற்றும் அதிகாரம் இருக்கின்றது, பெரும் போர் நடக்கவில்லை, பெரும் பஞ்சமும் இல்லை பின்பும் ஏன் உற்பத்தி சரிகின்றது?
உண்மை பெரும் விவகாரமானது
அதாவது இந்த அரசு ஒரு மாதிரியான தாலிபன் அரசு என பெயர் வாங்கிகொண்டிருக்கின்றது, உலகெல்லாம் அதனை கவனிக்கின்றார்கள்
ஆக வெளிநாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் முதலீட்டை வேறுபக்கம் திருப்புகின்றன, கலவரமும் பெரும் காலம் பின்னோக்கி போகும் அபாயமும் உள்ள நாட்டில் யார் முதலீடு செய்ய வருவார்கள்?
இந்த அமைச்சரவையில் அருண் ஜெட்லி தவிர படித்தவர்கள், சிந்தனையாளர்கள் என யார் இருக்கின்றார்கள்?
மீதி எல்லோரும் “இஸ்லாமியர் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள், கிறிஸ்தவர் ஐரோப்பாவிற்கு ஓடுங்கள், மாடு வாழ்க, மாட்டு மூத்திரம் வாழ்க , சாணம் வாழ்க , யோகா வாழ்க, காவி வாழ்க என்று சொல்லிகொண்டிருக்கின்றார்கள்..”
இந்த பண்டாரங்கள் கூட்டத்தை கண்டால் யாருக்கு அச்சம் வராது??? இதோ மாட்டுகறிக்கு தடை என்கின்றார்கள், நாளை ஒரு ஐரோப்பிய கம்பெனியினை, தொழிற்சாலையினை இந்த கும்பல்கள், மாட்டுகறி உண்கின்றார்கள் என அடித்து நொறுக்க எவ்வளவு நேரமாகும்?
சிலர் தூண்டிவிட்டால் அந்த அடாவடி கும்பல், தொழிற்சாலைக்குள் மாட்டுகறி விருந்து நடந்தது அதனால் அடித்தோம் என சொல்ல எவ்வளவு நாழிகை ஆகும்?
உலகெல்லாம் ஓடி மோடி நடித்தாலும், இந்தியாவில் உற்பத்தி குறைய இதுதான் காரணம் இதுதான் என்கின்றார்கள் சிலர், இந்தியாவின் சூழல் அவர்களுக்கு அச்சத்தை கொடுக்கின்றது.
எல்லா பன்னாட்டு நிறுவணங்களும், மற்ற நாடுகளும் இந்த அரசு என்றாலே பலமுறை சிந்திக்கின்றன
யாரும் இந்தியா வாழட்டும் என் பென்னிகுயிக் அணைகட்ட வந்ததுபோல் வரமாட்டார்கள், அக்காலம் முடிந்தது, இந்தியாவில் 10 லட்சம் டாலர் முதலீடு செய்தால் 20 லட்சம் டாலர் எடுக்க முடியுமா என கணக்க்கிடும் காலமிது
ஆனால் இவர்கள் ராமர், பாபர், கிருஷ்ணர் என ஒரு கலவரத்தை நடத்திவிட்டால் அவன் பணம் என்னாகும்? இதெல்லாம் யாரும் யோசிக்கமாட்டார்களா? முதலீடு செய்ய வருபவன் அந்த தேசத்தின் நிலையினை அறியமாட்டானா?
சீனாவும், சிங்கப்பூரும், தென் கொரியாவும், ஜப்பானும் முதலீடுகளை ஈர்க்கின்றன என்றால் இப்படித்தான், 5 பைசா போடாலும் அமைதியாக தொழில் செய்ய உத்திரவாதம் இருக்கின்றது, ஸ்டிரைக் , கலவரம், போராட்டம், மதவெறி,மாட்டுகறி பிரச்சினை எல்லாம் வாய்ப்பே இல்லை
அந்த நம்பகமான அரசும், அமைதியான சூழலுமே முதலீட்டுக்கு மகா முக்கியம் ,
இதனைத்தான் பல்வேறு காரணம் என சொல்லிவிட்டார் இவர்
பொறுங்கள், வெகு விரைவில் ஜிஎஸ்டி வரும், அது இன்னமும் பாதிக்கும்
அப்பொழுது இன்னமும் உற்பத்தி வீழும்
அப்பொழுது என்ன காரணம் ஜேட்லி வைத்திருப்பாரோ தெரியாது, அல்லது பல்வேறு காரணம் என சொல்லலாம்
இந்நாட்டை முழு மதவெறி நாடாக்கினால் என்னாகும் என்பதைத்தான் இவை எல்லாம் காட்டுகின்றன, அது ஒன்றுதான் காரணமே அன்றி பல்வேறு காரணம் எல்லாம் அல்ல.
மதவெறியில் ஒரு அரசு அமையுமானால் அதுதவறானவன் இயக்கும் ரயில் போன்றது, அதன் பாதிப்பு எல்லா பயணிக்கும் உண்டு என்றால் அப்துல் கலாம் ஆசாத், பாகிஸ்தான் பிரிவினையின் போது அதனைத்தான் சொன்னார்
அதுமகா உண்மை என இத்தேசம் உணர்ந்து கொண்டிருக்கின்றது,
அது இருக்கட்டும், இந்த பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் போல “மாட்டு பட்ஜெட்” ஒன்றை இந்த அரசு பார்லிமெண்டில் கொண்டுவரலாம் என சிலர் சீரியசாக சொல்கின்றனர்,
அதனை இன்னும் அருண்ஜெட்லி மறுக்கவில்லை என்பதுதான் அடிவயிற்றினை கலக்குகின்றது