உதயகிரி

இந்திய கடற்படை நேற்று இரு தாக்குதல் கப்பல்களை கடற்படையில் இணைத்துள்ளது, மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இதனை களத்தில் இறக்கினார்

அந்த கப்பல்களுக்கு “சூரத்” என்றும் “உதயகிரி” என்றும் பெயரிடபட்டுள்ளது

இந்த பெயரில் சூரத் என்பது சத்ரபதி சிவாஜி காலத்தில் இந்திய அடையாளமாக விளங்கிய துறைமுக நகரம் என்பதும், அங்கிருந்த கோட்டையினை குறிப்பதும் சொல்லி தெரியவேண்டியதில்லை

இந்த “உதயகிரி” எனும் பெயர்தான் இப்பொழுது கவனிக்கதக்கது, மத்திய அரசு சொல்லி அடிக்கும் விஷயம்

ஆம், உதயகிரி என்பது திருவாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்று கட்டிய பெரும் கோட்டை, இங்குதான் குளச்சல் போரில் பிடிபட்ட டச்சுக்காரன் டினலாய் அடைக்கபட்டிருந்தான் அவன் கல்லறை இன்றும் அங்கு உண்டு

அந்த டினலாய்தான் திருவாங்கூர் சமஸ்தான அதிகாரி நீலகண்ட நம்பூதிரி என்பவரை கிறிஸ்தவனாக்கி தேவசகாயம் பிள்ளை என்றும் ஆக்கினான் பின் இருவரும் கூட்டுசதி செய்த வழக்கில் தேவசகாயம் பிள்ளை கொல்லபட்டார்

அந்த தேவசகாயத்தை புனிதர் என வாடிகன் அறிவித்து தமிழக அமைச்சர்களெல்லாம் சென்று “தமிழனங்கு” பாடிய நிலையில் மத்திய அரசு ராணுவ கப்பலுக்கே “உதயகிரி” என பெயர் வைத்து அசத்தியிருக்கின்றது

உதயகிரிகோட்டை அன்று தென்னகத்திற்கு கடலில் இருந்து வரும் ஆபத்தை தடுத்த பெரும் வலுவான கோட்டை, அதை நினைவு கூர்ந்து சரியான நேரத்தில் கடற்படை கப்பலுக்கு சூட்டியிருக்கின்றது இந்தியா

அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த உதயகிரி கோட்டையில் டினலாய் நீலகண்டனை மதம் மாற்றினான் என வாடிகன் சொல்லி கொண்டிருக்கின்றதோ அதோடு வாடிகனின் பக்த கூட்டம் தென் தமிழகத்தில் கொண்டாடுகின்றதோ அந்த வாடிகன் கூட்டத்துக்கு சரியான பதிலடியினை “உதயகிரி” கப்பல் வழியாக கொடுக்கின்றது இந்திய கடற்படை

ஆம், அக்கோட்டையின் பெருமையினை எப்படி சொல்லவேண்டுமோ அப்படி சொல்லி கவுரவித்து தேசபாதுகாப்புக்கான பெரும் வரலாற்றை மீட்டெடுக்கின்றது இந்திய கடற்படையும் மோடி அரசும்

உதயகிரி கப்பல் தொகுதி ஏற்கனவே இருந்ததுதான் என்றாலும் இப்பொழுது மிக நவீனமாக ஸ்டெல்த் வகை தொழில்நுட்பத்துடன் மீண்டும் கட்டபட்டு அப்பெயரிலே களமிறக்கபடுகின்றது

உதயகிரி கோட்டை எக்காலமும் இந்தியாவின் காவல் கோட்டையாக நிற்குமாறு அன்றே கட்டிவைத்தான் மன்னன் மார்த்தாண்ட வர்மன், அவன் கனவு இப்பொழுது நனவாகி நாட்டை காத்துகொண்டிருக்கின்றது

இந்தியாவின் காவல் தெய்வம் அந்த மார்த்தாண்ட வர்மா எனும் மன்னன் அன்றி வேறல்ல..