உதயகுமாரை விமர்சிப்பது விளம்பரமா?
உதயகுமாரின் உத்தமர்கள் என சொல்லிகொள்ளும் சிலர் நாம் விளம்பரத்திற்கு அவரை விமர்சிப்பதாக அலறிகொண்டிருக்கின்றன
எதப்பா விளம்பரம்?
சசிகலா, பன்னீர்,பழனிச்சாமி எல்லாம் முதல்வராக நிற்கும்பொழுது கம்மென்று இருந்துவிட்டு ரஜினி என்றவுடன் அதுவும் அவர் கட்சி தொடங்குகின்றார் என்றவுடன் இடியோசை கேட்ட நாகம் போல அலறுவதுதான் விளம்பரம்
வேறு யார் வந்தாலும் கம்மென்று இருப்பாரம், ரஜினி என்றவுடன் நடுமண்டையில் வலிக்குமாம், உடனே தானே தமிழகத்தை காப்பது போல் குதிக்கின்றார் அல்லவா? அதுதான் விளம்பரம், ரஜினியில் தேடும் விளம்பரம்
எங்கே நீங்களும் உதயகுமாரும் உத்தமன் என்றால் ககன் தீப் சிங் பேடி அறிக்கை என்னாயிற்று என கேளுங்கள் பார்க்கலாம்,
போயஸ் தோட்டம் பார்ட் டு என ரஜினியினை சொல்லும் உதயகுமார், தினகரனையோ சசிகலாவினையோ சொன்னாரா உண்மையான பார்ட் டூ அவர்கள்தானே, பின் ஏன் இந்த ரஜினி விளம்பரம்?
இதனை சொன்னால் உங்களுக்கு வலிக்கின்றதா?
அதையெல்லாம் மறைத்துவிட்டு உதயகுமார் செய்வதே விளம்பரமன்றி எம்மை போன்றவர்கள் அவரை விமர்சிப்பது விளம்பரம் ஆகாது
நானும் அரசியலுக்கு வர தயாராக இருக்கிறேன் – பிரகாஷ்ராஜ்
அப்படி எல்லாம் முடியாது சார். சைமன்,கொளத்தூர் மணி, உதயகுமார் போன்ற தியாகிகள் “எல்லாம் தடை இல்லா சான்றிதழ்” வழங்கவேண்டும் அய்யா.