உதயநிதிபற்றி சொன்னால் மட்டும் குதிக்கின்றார்கள்

பெரியார் என்றால் ஆகா என்கின்றார்கள், அண்ணா என்றால் ஓஹோ என்கின்றார்கள், கலைஞர் என்றால் சூப்பர் என்கின்றார்கள்

ஆனால் உதயநிதிபற்றி சொன்னால் மட்டும் குதிக்கின்றார்கள்

டேய் பதர்களா, உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், பெரியார் அண்ணா கலைஞர் வரிசையில் அமர உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கின்றது? சொல்ல முடியுமா?

திமுக என்பது நீதிகட்சியின் தொடர்ச்சி. இங்குள்ள சில சமூக அரசியல் அமைப்பிற்கு அதன் எழுச்சி குரல் கட்டாயம் தேவை

கலைஞர் வரை அது சரியாக இருந்தது

இப்பொழுது உதயநிதி என நீங்கள் வருவது காண சகிக்கவில்லை

நீங்கள் ஸ்டாலின் அல்லக்கைகளாக இருக்கலாம், அவரை குளிர்விக்க தளபதி, தள்ளாதபதி என ஊளையிடலாம்

அந்த ஊளையில் உதயநிதி வாழ்க என சொல்லலாம்

எனக்கென்ன அவசியம் வந்தது?

பெரியார் அண்ணா கலைஞர் என பார்த்து வளர்ந்த ஒருவன் உதயநிதியினை ஆதரித்தால்தான் அது அவமானம் , அந்த மாபெரும் அவமானத்திற்கு நீங்கள் தயாராக இருக்கலாம், நான் எப்படி?

நான் திமுக கட்சி அல்ல, ஆனால் அரசியல் வரலாறை நோக்கினால் அதன் இடமும் முக்கியத்துவமும் தவிர்க்கமுடியாதது. அதனால் கலைஞர் வரை ஒரு அனுதாபம் எக்காலமும் உண்டு

சிங்கத்தின் மரியாதையினை பல்லிக்கும் ஓணானுக்கும் கொடுக்க என்னால் முடியாது

ஆணித்தரமாக சொல்கின்றேன் உதயநிதியால் உதயசூரியன் உதிக்கவே செய்யாது

நாம் திமுக என எவனாவது எண்ணி பின் தொடர்ந்தால் நீங்களாக விலகுங்கள்

உங்களுக்குக்கும் அந்த ராம்சந்திரன் கோஷ்டி, ஜெயாவின் அடிமை கோஷ்டி, இப்பொழுது தினகரனுக்கும் பழனிசாமிக்கும் உருவாகும் கோஷ்டிக்கும் என்ன வித்தியாசம்?

சொல்லபோனால் அவர்களை விட நீங்கள் மகா மோசம், போங்கடா டேய்