உதயநிதி இதிலிருந்து பாடம் படித்தால் அவருக்கு நல்லது
திமுகவில் ஒரு சராசரி நடிகன் ஓவர் பில்டப் கொடுத்து பிம்பமாக உருவாக்கபட்டால், அவனை சிலர் முருங்கை மரத்தின் மீது ஏற்றிவிட்டால் என்னாகும் என்பதகு உதயநிதிக்கு சாட்சியாக அவரது பெரியப்பா மு.க முத்துவே இருக்கின்றார்
வேறு எங்கும் உதயநிதி உதாரணம் தேடி அலையவேண்டியதில்லை, அது அவர் குடும்பத்திலே இருக்கின்றது.
முக முத்து சராசரி நடிகனாக அதைவிட நல்ல பாடகனாக சினிமா உலகில் நின்றிருப்பார். ஆனால் பெரும் பிம்பங்களும் அவருக்கு திடீரென எழும்பிய ரசிகர் மன்றமே திமுகவின் பல சிக்கல்களுக்கு காரணம்
கலைஞர் தன் மகன் கலைதுறையில் அவன் திறமையில் வளரட்டும் என்றுதான் விட்டிருந்தார். முக முத்து மன்றங்களை கலையுங்கள் என்ற அறிக்கை கூட அவரிடம் இருந்து வந்தது
ஆனால் சில திமுகவினர் விடாபிடியாக முக முத்துவினை தூக்கிபிடித்ததன் விளைவு என்னவெல்லாமோ நடந்தது
முக முத்துவும் சரிந்தார்
நிச்சயம் பெரும் பாடகனாகவோ இல்லை கலைஞர் காலடியில் அரசியல்வாதியாகவோ வந்திருக்க வேண்டிய முத்து , காந்தியின் குடிகார மகன்போல் ஆகிவிட்டார்
சினிமா என்பது யாரை எப்பொழுது தூக்கும், தூக்கி அடிக்கும் என்பது தெரியாது. அப்படியே அரசியலில் யார் எப்பொழுது எங்கு அடிப்பார்கள் என்பதும் தெரியாது
அடிப்பொடிகள் எப்பொழுதும் தலைவன் மகிழ்வான் என ஏதாவது செய்து தொலையும், அது ஹிட்லர் காலத்தில் இருந்து ஜெயா கால பஸ் எரிப்பு, தினகரன் அலுவலக எரிப்பு என ஏராளம் உண்டு
ஆக அடிப்பொடிகள் செய்வதை எல்லாம் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து, தன்னிலை அறிந்து செயல்பட்டால் தவிர யாரும் தப்பமுடியாது
மு.க முத்து அதற்கு பெரும் உதாரணம்
உதயநிதி இதிலிருந்து பாடம் படித்தால் அவருக்கும் நல்லது, திமுகவிற்கும் நல்லது
இந்துத்த்வா சக்திகள் வேகமாக வளர்கின்றன, 1940களில் அடக்கபட்ட அக்குரல்கள் படு வேகமாக ஒலிக்கின்றன
மிக தந்திரமாக பொம்மை அரசை தமிழகத்தில் வைத்து அவை தங்களை நிறுத்த பெரும் முயற்சி செய்கின்றது
எந்த பிரச்சினை என்றாலும் வரிந்துகட்டி தங்கள் குரலை மிக அழுத்தமாய் பதிவு செய்கின்றன, அவர்கள் குரலுக்கும் ஆதரவு வலுக்கின்றது
திமுகவின் குரல் மங்குகின்ற நேரமிது
தன் இருப்பை தக்கவைக்க பெரும் களப்பணி ஆற்றவேண்டிய திமுக உதயநிதிக்கு போஸ்டர் அடித்துகொண்டிருப்பது அந்த போஸ்டரில் சாணியடிக்க செய்யும் விஷயம்
நல்ல திமுகவினர் என்றால் நிச்சயம் சாணி அடிப்பார்கள்
ஆனால் அதிமுக சசிகலா குடும்பத்திடம் சிக்கியது போல இவர்கள் ஸ்டாலின் குடும்பத்திடம் சிக்கினால் எப்படி அடிப்பார்கள்?
திமுக சங்கரமடமாக மாறி வருவதும், அதில் மன்னார்குடி சாயல் தெரிவதும் நிச்சயம் நல்லதல்ல
இந்நிலை நீடித்தால் கலைஞர் காத்த இயக்கம் அவரின் குடும்பத்தாரால் அழிந்தது என்ற அவப்பெயரை தவிர வரலாற்றில் ஏதும் நிற்காது.