உத்தம வில்லன் : குஷ்பூ யாமினியாக நடித்திருந்தால்….
டிவியில் உத்தம வில்லன் படம் ஓடிகொண்டிருக்கின்றது, நல்ல படம்தான், ஆனால் வெற்றிபெறவில்லை என்றார்கள். தமிழகத்தில் நல்ல படங்கள் எல்லாம் வெற்றிபெற முடியாது, இங்குள்ள ரசனை அப்படி
பாலசந்தரின் கடைசி படம். கமலஹாசனையும் பாலசந்தரையும் மாறி மாறி பார்க்கும்பொழுது பற்பல நினைவுகள் எல்லாம் வருகின்றன, எப்படி எல்லாம் இணைந்து பணியாற்றியிருப்பார்கள்,
எப்படி எல்லாம் கமலஹாசனை அவர் செதுக்கியிருப்பார்? இப்படி ஏக நினைவுகள்..
இருவருமே நடிப்பில் பின்னி எடுத்திருக்கின்றார்கள், பொறுமையாக பார்க்கவேண்டிய படம் இது
அது இருக்கட்டும்
இப்படம் வெற்றி பெறாதற்கு இரு காரணங்கள், முதலாவது இரு படங்களுக்கான கதை அதனை ஒரு படத்தில் போட்டு குழப்பியிருக்கின்றார்கள்
இரண்டாவது விஷயம் மகா முக்கியமானது, அந்த யாமினி எனும் பாத்திரத்திற்கு குஷ்பூவினை அமர்த்தியிருக்கலாம், கதைக்கு மிக நல்ல வலு சேர்த்திருப்பார்.
நிச்சயமாக கமலஹாசன் நல்ல அழகர், அந்த அழகிற்கு ஈடாக குஷ்பூவினை தவிர யாரை நிறுத்தமுடியும்?
யாமினி பாத்திரத்தில் குஷ்பூவினை நடிக்க வைக்காத ஒரே காரணத்தால் பெருவெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்த படம் தோல்வியடைந்துவிட்டது தான் சோகம்
இனியாவது கமலஹாசன் கொஞ்சம் கவனமாக இருக்கட்டும்