உத்திரப்பிரதேச பாஜக அரசின் புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.

Image may contain: 6 people

உத்திரப்பிரதேச பாஜக அரசின் புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.

காவியும், நாமமும் பிண்ணணியில் ஏகபட்ட சர்ச்சைகளுடன் ஒரு சாமியார் பதவியேற்றிருப்பது எதனை காட்டுகின்றது?

நாட்டிற்கு படித்தவனோ, சிந்தனையாளனோ தேவையே இல்லை சாமியார் மட்டும் போதும் எனும் பாஜகவின் ஆத்மார்ந்த கொள்கையினை காட்டுகின்றது.

அடுத்து ஜனாதிபதி தேர்தல் வேறு வரப்போகின்றதாம், காஞ்சி சங்கராச்சாரி, சிருங்கேரி, காஞ்சி,துவாரக, மதுரை ஆதீனம் என‌ மட அதிபர்கள் எல்லாம் இனி குடியரசு தலைவர் கனவில் மிதக்கலாம்

அவர்களை விட கங்கை கரையில் நிர்வாணமாய் அலையும் அகோரி சாமியார்களுக்கு ஜனாதிபதி கனவு மிக அதிகமாய் இருக்கலாம்

அவர்கள் ஜனாதிபதியாக வந்தாலும் ஆச்சரியபட ஒன்றுமில்லை

ஈரான், ஆப்கன் போன்ற நாடுகளில் உச்ச நீதிமன்றமாக மத குருமார்களின் கமிட்டியே செயல்படும், எல்லா பிரச்சினைகளையும் ஷரியத் முறையிலே தீர்ப்பார்கள்

அப்படி இனி இந்திய உச்ச அதிகாரமும் இந்த சாமியர்களிடம் மனுநீதி அடிப்படையில் சிக்கும் நாள் மிக அருகிலே உள்ளது

பாரதத்திற்கு இப்படி ஒரு சாமியார் சோதனை….


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: உ.பி.,முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி

எப்படி? ராமர் கோவில் வேலை ஆரம்பித்தா?

ஏற்கனவே பாபர் மசூதி இடிக்க பெரும் வேலைவாய்ப்பு முன்பு வழங்கபட்டது, இனி ராமர்கோயில் கட்டவும் வேலைவாய்ப்பு வழங்கபடும்.

மசூதிகளை இடிக்க ஒரு வேலை, அடுத்து கோயில் கட்ட இன்னொரு வேலை, ஒரே இடத்தில் இரண்டு வேலை, எப்படிபட்ட பெரும் வேலைவாய்ப்பு கொள்கை??

ராமரை கடந்து, மதுரா கிருஷ்ணன் கோயில் என பல சர்ச்சைகளை கிளப்பி, அடுத்த 50 வருடம் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் பல திட்டங்கள் இந்த சாமியாரிடம் உண்டு.

மசூதிகளை இடிக்க ஒரு வேலை, அடுத்து கோயில் கட்ட இன்னொரு வேலை, ஒரே இடத்தில் இரண்டு வேலை, எப்படிபட்ட பெரும் வேலைவாய்ப்பு கொள்கை??


யோகி ஆதித்யநாத் முதலமைச்சரானதில் இந்தியா முழுக்க சர்ச்சை வலுக்கின்றது

மோடியின் விருப்பம் அவர் அல்ல, அவரை மீறி முடிவெடுக்கபட்டது என பத்திரிகைகள் எழுத தொடங்கிவிட்டன‌

மோடியும் மறைமுகமாக அதனை சொல்கின்றார், உபியின் வளர்ச்சி முக்கியம், அது முக்கியம் , நாடு முக்கியம் என என்னவெல்லாமோ சொல்கின்றார்

அதாவது யாரும் அவரைபற்றி அச்சபட வேண்டாம் என்பது போல் மோடி பேசிகொண்டிருக்கின்றார் என்பது விளங்குகின்றது, பூசி மொழுகுகின்றார் மோடி.

ஆக பல ஐயப்பாடுகள் அந்த யோகிமேல் வந்திருப்பது நிஜம்

இதனை நாம் சொன்னால் சம்பந்தம் இல்லாமல் வந்து குதித்துகொண்டிருப்பார்கள்….