உன்னத தலைவனை விரட்டினால் தமிழகத்திற்கு என்ன கிடைக்கும்?
அது காமராஜர் முதல்வரான காலம், ஒரு ஆலை அனுமதி தொடர்பாக அவரிடம் வந்து நிற்கின்றார்கள் கம்பெனியார். மிக பெரும் முதலீட்டான ஆலை அது.
கோவை அருகே அருகில் கிட்டதட்ட 50 கிராமங்களை தாண்டி அனுமதி கொடுக்கின்றார் காமரஜார்.
“அவ்வளவு தூரம் தள்ளி ஏன் அந்த ஆலைக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என கேட்கின்றனர் அதிகாரிகள்”
காமராஜர் சொன்னார்
“எல்லா கிராமங்களுக்கும் சாலையும், மின்சாரமும் கண்டிப்பா கொடுக்கணும்கிறது நமது திட்டம், இந்த 50 கிராமங்கள் தாண்டி அந்த ஆலை அமைந்தால், அவன் மின்சாரமும், சாலையும் கொண்டு செல்ல தரமாக வசதிகள் செய்வான்
அதிலிருந்து அந்த கிராமங்களுக்கு தேவையான மின்சாரத்தை எடுப்பது அரசுக்கு ரொம்ப சுலம்பம்ணேன்ன்”
அப்படி அன்றே கிராமங்களுக்கு எப்படி மின்சாரம் கொண்டு சேர்ப்பது என சிந்தித்து செயல்படுத்தியவர் காமராஜர்.
பின் வந்த கழக அரசுகள் அதனைத்தான் தொடர்ந்ததேயன்றி, புதிதாக அல்ல.
சிலர் சொல்லிகொண்டிருப்பது போல மின்சாரம் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கபட்டபின் , உலகிலே அது இரண்டாவதாக கொண்டுவரபட்டது திராவிட கட்சிகளின் ஆட்சியின் பொழுது தமிழகத்தில்தான் என்பதெல்லாம் சும்மா..
இன்று நாடுமுழுக்க மின்சாரம் கொடுப்போம் என மோடி சொல்லும் பொழுது, அன்றே தமிழகம் முழுக்க மின்சாரம் கொடுக்க முயன்ற காமராஜர் நினைவுக்கு வந்து போகின்றார்.
அப்படிபட்ட உன்னத தலைவனை விரட்டினால் தமிழகத்திற்கு என்ன கிடைக்கும்?
பன்னீரும், பழனிச்சாமியும்தான் கிடைக்கும்.