உபிக்கள் ஆனந்த கண்ணீர்
திருகுறளை உலகிற்கு சொன்னதே திமுகதான் : உபிக்கள் ஆனந்த கண்ணீர்
திருகுறளை அச்சிக்கு கொண்டுவந்து மக்களிடம் சேர்த்தவர் உ.வே சாமிநாதய்யர்
சைவ சித்தாந்த கழகம் போன்றவை அதை மக்களிடம் சொல்லிகொண்டே இருந்தன, குறள் மட்டுமல்ல நாலடியார் முதல் திவ்யபிரபந்தம் வரை அவை பரப்பின
வீரமாமுனிவர், கால்டுவெல் போன்றோர் திருகுறளை மொழிபெயர்த்து ஐரோப்பாவுக்கே கொண்டு சென்று பரப்பினர்
எல்லீஸ் ஆங்கில போன்ற கலெக்டர்கள் திருகுறளில் மயங்கி அதை கல்வெட்டாக்கி ஏன் திருவள்ளுவருக்கு நாணயமே வெளியிட்டனர்
மறைமலை அடிகள் இயக்கம் முதல் எத்தனையோ இயக்கம் குறள் முதல் கம்பராமாயணம் வரை வளர்த்தன பரப்பின
திராவிட கும்பல்கள் மெதுவாக வந்தன, வந்து பார்த்தால் தமிழனின் இலக்கியம் எல்லாம் கடவுள் மயமாக இருந்தன
கம்பராமாயணம், சிலப்பதிகாரம், நாலடியார், மூதுரை என எல்லாவற்றிலும் கடவுள்கள் வந்தார்கள்
தத்துவநூலான திருகுறளில் பெரும்பாலும் பக்திசாயல் நிரம்ப இல்லை ஆனால் தமிழ் என்ற பெயரும் இல்லை
இவர்களுக்கு தமிழா முக்கியம்? கடவுள்தான் முக்கியம்
வேறு வழி இல்லாததால் திருகுறளில் தொங்கினார்கள், முப்பாலையும் மனப்பாடம் செய்தார்களோ இல்லையோ ஒரு பிரிவுக்கு ஒரு மனைவி கொண்டு திருகுறளை பரிசோதித்தும் பார்த்தார்கள்
திருவள்ளுவன் கொண்டாடபடவேண்டியவன் ஆனால் கம்பனும் இன்னும் பலரும் என்ன பாவம் செய்தார்கள்
அவர்கள் செய்த பாவம் தெய்வங்களை பாடியது அவ்வையார் உட்பட