உயிராபத்து மிரட்டல் வந்துகொண்டிருக்கின்றது

மாரிதாஸ் தனக்கு உயிராபத்து மிரட்டல் வந்துகொண்டிருக்கின்றது என்கின்றார்

இன்னும் சிலரின் பாதுகாப்பும் சொல்லிகொள்வதாக இல்லை

நமக்கும் நிலமை சரியில்லை, கையில் கிடைத்தால் கரும்பாக பிழிந்துவிடுவார்கள்

ஒரு பயலையும் விடாமல் எல்லோரையும் வம்பிழுத்தால் இப்படித்தான் நடக்கும், ஆனாலும் நீதி நேர்மை நியாயம் நாட்டுபற்று நமக்கு முக்கியம்,

நம்மையும் சிலர் குறித்து வைத்திருக்கலாம், இந்தியா பக்கம் வருவதாக இருந்தால் பலத்த யோசனையுடன் முன்னேற்பாடு பல செய்துவிட்டுத்தான் வரவேண்டும் போலிருக்கின்றது

என்ன செய்யலாம்?

அங்கிள் சைமன் தன் வியப்பும் திகைப்பும் மிக்க கொழும்பு பயணத்தில் சொன்னபடி மரு வைத்து, கூலிங்கிளாஸ் போட்டு, தலையில் தொப்பி எல்லாம் வைத்து மாறுவேடத்தில்தான் வரவேண்டும்

ஆனால் என்னை குறித்து வைத்திருக்கும் அன்பர்களே, நான் 200ரூபாய்க்கு அல்ல, 200 டாலர்க்கு எழுதினேன், என்பதை பகிரங்கமாக ஒப்புகொள்கின்றேன்

அப்படி எழுதி கிடைத்த பில்லியன் டாலரில் சல்லி டாலரும் எடுக்காமல் தலைவி குஷ்புவின் கோவில் செலவுக்காக சுவிஸ் வங்கியில் மகா பத்திரமாக வைத்திருக்கின்றேன்,

சமீபத்தில் ஈரான் அரசு தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் பெரும் வட்டி தருவதாகவும் சொல்லியும் நாம் கொடுக்கவில்லை, காரணம் ஆலய வேலை எப்பொழுதும் தொடங்கபடலாம்

பதிவுக்கு 200 டாலரை தந்து எழுத சொன்னது வேறு யாருமல்ல Devi Somasundaram என்பவர்தான்

இதுவரை ஒரு டாலரும் பாக்கியில்லை, அந்த அளவில் அவள் மிக நல்லவள்

ஒரு சிலமுறை போனஸ் கூட யூரோவிலும்,தினாரிலும் கொடுத்திருக்கின்றாள்

அதனால் அம்பான என்னைவிட்டுவிட்டு என்னை எய்த அவளை எங்கேணும் கண்டுபிடிக்கமுடிந்தால் பிடித்து சாத்துங்கள்,

முடிந்தால் கொல்லுங்கள்

என்னை விட்டுவிடுங்கள், நான் ஒரு அப்பாவி.

தலைவி குஷ்புவே கண்டுகொள்ளா எம்மை நீங்களும் கண்டுகொள்ளாமல் விடுவதுதான் உங்களுக்கு அழகு,

உங்கள் தகுதிக்கும் அழகு..