‘உயிர்கொடுத்து எங்களை விடுவித்தவ‌ர் ராஜிவ்….’

Image may contain: 3 people

ஒரு ஈழ சிந்தனையாளர் ஒருவரிடம் பேசிகொண்டிருக்கும் பொழுது சொன்னார், அவர் புலி குஞ்சு அல்ல மாறாக சிந்திப்பவர்

“எங்கள் நாட்டில் புலிகள் காலங்களில் எங்கள் நாட்டில் நடந்த கொடூரங்கள் உங்களுக்கெல்லாம் ஓரளவுதான் தெரியும், முழுக்க தெரியாது

கொலைக்கும், கொள்ளைக்கும் போராட்டம் என பெயர், அவர்களை கட்டுபடுத்த யாராலும் முடியவில்லை, காலம் அப்படி

நாங்கள் வாழ்ந்த பரிதாப வாழ்வு அப்படி

ஏதோ ஒரு சக்தி ராஜிவினை கொல்ல அவர்களுக்குள் புகுந்தது , ராஜிவ் மட்டும் சாகவில்லையென்றால் எங்களுக்கு விடிவே இல்லை

உயிர்கொடுத்து எங்களை விடுவித்தவ‌ர் ராஜிவ்”

அந்த ஈழதீயில் தன்னையே எரித்து உண்மையினை உணர்த்தியவர் அவர்

ராஜிவ் தமிழகத்தில் சாகவில்லை என்றால், தொடர்ந்து பல அரசியல் கொலைகள் நடந்திருக்கும், புலிகளை எதிர்த்த எல்லோரும் கொல்லபட்டுகொண்டே இருந்திருப்போம்

ராஜிவ் அதனை தடுத்திருக்கின்றார்

ராஜிவோடு கொல்லபட்டு, தமிழகத்தில் புலிகளின் கொலைகரங்களை முறித்த அந்த 15 தமிழருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்

அதில் எம் நெல்லை மாவட்ட காவல் அதிகாரியும் உண்டு

அவர்கள் எல்லாம் செத்து தமிழகத்தை அமைதியாக்கியிருக்கின்றார்கள், அவர்கள் தான் மாவீரர்கள்

ராஜிவிற்கும் அவர்களுக்கும் வீரவணக்கம்