உருகுவே நாட்டில் ஒரு வித்தியாசமான சம்பவம்
உருகுவே நாட்டில் வித்தியாசமான சம்பவம் நடந்திருக்கின்றது, அதாவது ஒரு பெண் தன் படத்தினை பதிவேற்றியிருக்கின்றார், லைக்குகள் குவிந்திருக்கின்றன
(எந்த நாட்டிலும் இப்படித்தான் இருக்கும் போல..)
இதனால் ஆத்திரபட்ட கணவன் அந்த முகத்திலே குத்தி அவளை காயபடுத்தியிருக்கின்றான், அவள் இப்போது சிகிச்சையில் இருக்கின்றார்
கணவனை காவல்துறை கைதுசெய்து விசாரித்தபொழுது உண்மை தெரிந்திருக்கின்றது, அதுவும் “இப்போ படத்தை போடு, இந்த மூஞ்சியினை போடு..” என சொல்லி சொல்லி அடித்திருக்கின்றான்
ஆச்சரியமாக அடிபட்ட முகம்தான் உலகெல்லாம் பரவியிருக்கின்றது, உருகுவே நாட்டு முகநூல்காரன் பார்த்த முகத்தை இப்பொழுது உலகமே பார்த்துகொண்டிருப்பதை பார்த்து அந்த கணவன் பல்லை கடித்துகொண்டிருக்கின்றான்
இங்கு சும்மாவே பெண்கள் தங்கள் படத்தினை வைக்க நூறுமுறை யோசிப்பார்கள், இனி சுத்தம்
ஆனால் Devi Somasundaram போன்றவர்களின் வருங்கால கணவர்கள் கிழிந்த முகத்துடன் பின்னாளில் வர வாய்ப்பிருக்கின்றது.
அதற்கு முன்பு திருமண நிச்சயம் செய்தபின்னும் நயன் பதிவுகளை போட்டுகொண்டிருக்கும் Babu Rao என்பவர் படம் முகம் வீங்கிய நிலையில் வந்தாலும் வரலாம்.