உலகம் நிம்மதியாய் இருக்கவே கூடாது : அமெரிக்கா
உலகம் நிம்மதியாய் இருக்கவே கூடாது என்பதில் அமெரிக்காவிற்கு அக்கறை என்றுமே அதிகம், அதன் பங்களிப்பு இன்றி கடந்த 70 வருடங்களில் நேரடி போரும் இல்லை, மறைமுக போரும் இல்லை
பாகிஸ்தானை வளர்த்ததே அவர்கள்தான், அவர்கள் மட்டும் இல்லையெனில் இன்று பர்மா வங்கதேசம்போல பாகிஸ்தான் எனும் மேற்கு இந்தியா பராரி தேசமாகியிருக்கும்
அப்படிபட்ட அமெரிக்கா வடகொரியா தென்கொரியா சமாதனமாக போக தொடங்கியிருக்கும் பொழுது முதலில் வாழ்த்தினாலும் பின்பு பல்லவியின மாற்றுகின்றது
அணுகுண்டு இல்லை என்றாலும் வடகொரியா மீதான பொருளாதார தடையினை நீக்க முடியாது, நான் வடகொரிய அதிபரை சந்திக்கும் பொழுது அவர் தோப்புகரணம் போட வேண்டும், முழங்காலில் நிற்க வேண்டும் என்பது போல் பேசிவிட்டார் டிரம்ப்
அடுத்த சர்ச்சையாக ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்க அடிக்கல் நாட்டி விழா எடுக்கின்றார், இது இஸ்லாமிய நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றது
ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் என இதன் மூலம் அமெரிக்க நாட்டாமை தீர்ப்பு சொல்வதால் ஒரு வித கோபம் இஸ்லாமிய நாடுகளில் தெரிகின்றது
ஆனால் ஈரான் தவிர அதனை எதிர்க்க இப்பொழுது யாரும் அப்பகுதியில் இல்லை