உலகின் அதி அற்புதமான நகரங்களுள் ஒன்று ஜெருசலேம்

Image may contain: one or more people, sky and outdoorஉலகின் அதி அற்புதமான நகரங்களுள் ஒன்று ஜெருசலேம், மிக பழமையும், மிக புதுமையும் கொண்டு இன்றைய உலகில் ஒரு மிக விசித்திரமான நகரம் அது

அதனை விட மகா முக்கியம், யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு அதுதான் புண்ணியஸ்தலம்

அது முதலில் ஆபிராகம் தன் மகனை பலியிட்ட இடம் என்பது யூதரின் நம்பிக்கை, அந்த சம்பவம் நடந்து ஆபிரகாம் சந்ததி எகிப்தில் அடிமையாகி திரும்பும் பொழுது அது ஜெபூசியர் எனும் இனத்தின் கையில் இருந்தது

இஸ்ரேலிய மாமன்னன் தாவிது அதனை கைபற்றினார், வலுபடுத்தினார், அவரின் மகன் சாலமோன் அதில் யூத கடவுளுக்கு முதல் ஆலயம் அமைத்தான், இதனால் அது யூதர்களுக்கு பிரதானம்

யூதர்களுக்கு ஒரே கோயில் அதுதான், இன்று இல்லை என்றாலும் அந்த இடத்தில்தான் அமைப்போம் என அடம்பிடிக்கும் அளவு அவர்களுக்கு முக்கியம்

இயேசுவின் சிலுவைபாடுகள் அங்குதான் நடந்ததால் அது கிறிஸ்தவர்களுக்கு மகா முக்கியம்

இஸ்லாம் மதம் அந்த யூத மததொடர்புடையது என்பதாலும், நபி பெருமான் ஜெருசேலம் மசூதியில் கால்பதித்ததாலும் அது அவர்களுக்கு மூன்றாம் முக்கிய மசூதி

இப்படிபட்ட ஜெருசலேமிற்காக நடந்த யுத்தங்கள் கொஞ்சமல்ல, ரோமானியர் இயேசுவிக்கு பின்னால் அந்த நகரை அழித்தே போட்டனர், ஆம் அது இருந்தால் பல போர்களுக்கு காரணமாகும் என்பது அவர்கள் கணிப்பு

பின் ரோமாபுரி கிறிஸ்தவர்களிடமும், அரபு உலகம் இஸ்லாமியரிடமும் வந்தபின் மறுபடியும் கொடூர யுத்தம், சிலுவை போர்கள் முதல் பல போர்கள் நடந்தன‌

ஜெருசலேம் யாருக்கு என்பதில் கிறிஸ்தவ உலகமும், இஸ்லாமிய உலகமும் மூர்க்கமாக மோதின, யூத இனம் களத்திலே இல்லை, ஓரமாக அழுதுகொண்டிருந்தது

எங்கள் பூமிக்கு இவர்களா அடித்துகொள்வது என அது மனதிற்குள் கருவிகொண்டிருந்தது.

1948ல் இஸ்ரேல் உருவாக்கபட்டாலும் ஜெருசலேம் பாலஸ்தீன, ஜோர்டான் கட்டுபாட்டிலே இருந்தது, இஸ்ரேலுக்கு அதில் பெரும் அதிகாரமில்லை, அதுவும் கிழக்கு ஜெருசலேமே அதிமுக்கிய புராதன பகுதி, அதற்குள் இஸ்ரேல் நுழைய முடியவில்லை

யூதர்களா விடுவார்கள்? அவர்களின் குறியே ஜெருசலேம் அல்லவா? விடாத யுத்த தொடர்ச்சியாக 1967ல் இந்நாளில்தான் , ஜூலை 7ல்தான் ஜெருசலேமினை யுத்தத்தில் கைபற்றினார்கள்

அதாவது கிட்டதட்ட 2000 ஆண்டுகள் கழித்து யூதர்களுக்கு அந்த ஜெருசலேம் இந்தநாளில்தான் கிடைத்தது

முழு ஜெருசலேமும் தங்களுக்கு கிடைத்ததில் இஸ்ரேலியருக்கு அவ்வளவு ஆனந்தம், ஆனால் இன்றும் எதிர்ப்பு பலமாக இருக்கின்றது

பாலஸ்தீனமும், அரபு நாடுகளும் கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனத்திற்கு என சொல்லிகொண்டே இருக்கின்றன, அராபத் கூட தன் உடலை சிமெண்ட் பெட்டியில் புதைத்து பின்னொரு நாளில் கிழக்கு ஜெருசலேமில் புதைக்க வேண்டும் என சொல்லித்தான் இறந்தார்

ரமல்லாவில் இன்றிருப்பது அவரின் தற்காலிக கல்லறை

இஸ்ரேலோ எதையும் கவனத்தில் கொள்ளவில்லை, டெல் அவிவிலிருந்து தன் தலைநகரை ஜெருசலேமிற்கு ஓரளவு மாற்றிவிட்டது, இன்று டெல் அவிவ் ஒரு பாசாங்கு நகரம், மற்றபடி ஜெருசலமே பிரதானம்

அதற்கு அங்கீகாரமாக அமெரிக்க தூதரகத்தை அங்கு மாற்ற டிரம்பிடம் சொன்னதும், டிரம்ப் ராஜதந்திரத்தில் கோட்டைவிட்டதால் அந்த திட்டம் சறுக்கியதும் வேறு கதை

இனி ஜெருசலமேமினை இஸ்ரேல் விட்டுகொடுக்குமா என்றால் நிச்சயம் கொடுக்காது, காரணம் ஒவ்வொரு யூதனும் உலகெல்லாம் உழைப்பது அந்த நகருக்காகவும், அங்கு அமைய இருக்க்கும் ஆலயத்திற்காகவும்

அவ்விஷயத்தில் யூதனை திருத்தவே முடியாது, அன்பாக சொன்ன இயேசு முதல், அடித்து சொல்லிபார்த்த ஹிட்லர் வரை எல்லோரும் தோற்றுவிட்டார்கள்

இன்று இஸ்ரேலின் ஒரே இலக்கு அங்கு இருக்கும் அல் அக்சா எனும் பழங்கால மசூதியினை அகற்றிவிட்டு அங்கு சாலமோனின் ஆலயத்தை கட்டுவது, அங்குதான் ஆலயம் இருந்தது என்பது அவர்கள் நம்பிக்கை

அழும் சுவர், பொற்கூரை மசூதி எல்லாம் அந்த வளாகத்தில்தான் உண்டு, ஜெருசலேம் அடையாளமே அவைகள்தான், அவற்றை அழித்துத்தான் தன் அடையாளத்தை பதிக்க இஸ்ரேல் முனைகின்றது

கொஞ்சம் கொஞ்சமாக தந்திரமாக ஒரு இடத்தை அபகரிப்பதில் வல்லவர்கள் யூதர்கள், ஆப்பத்தை ஓரத்திலிருந்து உண்ணும் கலை அவர்களது

முதலில் பாலஸ்தீனத்தில் ஓரிடம் வெண்டும் என்றார்கள், பின் ஜெருசலேமில் கொஞ்ச இடம் என்றார்கள், இன்று அந்த மசூதிக்குள் பாலஸ்தீனர்களை அனுமதிப்பது எங்கள் சகிப்புதன்மை என்ற அளவிற்கு வந்துவிட்டார்கள்

விரைவில் அந்த சகிப்புதன்மை மறைந்து ஆலயம் கட்டபடலாம், இன்று இல்லாவிட்டாலும் இன்னொருநாள் யூத இனம் அதனை செய்தே தீரும்

அரபு நாடுகளிடம் ஒற்றுமை இல்லை, இன்னும் ஏராளமான வாய்ப்புகள் இஸ்ரேலுக்கு சாதகம், ஜோர்டான் முதல் சவுதி வரை எல்லாம் இஸ்ரேலுடன் அனுசரித்து போக ஆரம்பித்தாயிற்று, ஈரான் மட்டுமே எதிரி

அதாவது 17 எதிரி ஒரு எதிரியாக குறைக்கபட்டிருக்கின்றான், இஸ்ரேலின் வெற்றி இது

எப்படியோ உள்ளே 100% இஸ்ரேலிய நகரமாகவும், உலகின் பார்வைக்கு 60% இஸ்ரேலிய கட்டுபாட்டு நகராகவும் காட்சி தரும் அந்த நகரில் 2000 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேல் புகுந்து 50 வருடங்கள் ஆகின்றன‌

ஆனாலும் அது அதிசயம், 2000 ஆண்டுகாலமாக ஒரு இனம் போராடி தன் முன்னோர் நகரை மீட்க முடியுமா? நமக்கு 4ம் தலைமுறையே தெரியவில்லை, ராஜராஜ சோழன் என்பவன் பெரியகோவில் கட்டினான் என்பதை ஜெர்மானியன் தான் நமக்கு சொன்னான்

அவ்வளவு ஏன்? மதுரையில் ஹேமநாத பாகவரை விரட்டிய பாண புத்திரருக்கு பாண்டிய மன்னன் சொத்துக்கள் கொடுத்தான் அல்லவா? அதில் ஒரு வீடு நிச்சயம் இருந்திருக்கும், யாராவது நாங்கள்தான் அந்த பாண புத்திரருக்கு வாரிசுகள், எங்கள் முன்னோர் நிலம் எங்களுக்கு என வர முடியுமா? வந்தாலும் சாத்தியமா?

ஆனால் இஸ்ரேலில் இது எங்கள் முப்பாட்டன் ஆபிரகாம் நிலம், என வந்து அட்டகாசமாக அபகரிக்கின்றார்கள், அட ஆபிரகாமே வந்தேறி, அவன் சந்ததியான நீங்கள் வந்தேறி என பாலஸ்தீனியர் சொன்னாலும் யார் காதில் விழுகின்றது

உலகெல்லாம் கிறிஸ்தவர்கள் அது இஸ்ரேலுக்கே என அநியாய தீர்பளிப்பார்கள், காரணம் யூதம் தன் பழைய ஏற்பாடு மூலம் கிறிஸ்துவத்தில் புகுந்து அப்படி அவர்களை தன் அடிமைகளாக உருவாக்கி வைத்திருக்கின்றது

இஸ்ரேல் பெரும் ஆரவாரத்துடன் இந்த 50ம் ஆண்டு விழாவினை கொண்டாடுகின்றது
கொண்டாடிகொண்டிருக்கின்றது

இன்னும் என்ன தாமதம்? இதுதான் நம் தலைநகரம், கலை நகரம், என அறிவித்தால் என்ன? என யூத குருக்கள் குரல் கேட்கின்றது

அது தலைநகரானால் நிச்சயம் கொலைநகர் ஆகும் என இஸ்லாமிய தரப்பு கடும் மிரட்டல் விடுக்கின்றது

இந்தியாவிற்கு ராமர் கோவில் போல, உலகிற்கு அந்த யூத கோவில் பெரும் மிரட்டல், சந்தேகமே இல்லை

எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத இஸ்ரேல், வழக்கம் போல கொசு கடித்ததை போல கண்டுகொள்ளாமல் இருக்கின்றது

50 ஆண்டுகளில் ஜெருசலேமினை இஸ்ரேல் அந்த ஆலயத்திற்காக தயார் செய்துவிட்டது, இனி எந்நேரமும் அது அமைக்கபடலாம்

ஆனால் பெரும் ரத்த களறியில்தான் அது அமைக்கபடும் என்பது இன்னொரு பயங்கரம்.

உலகில் நடக்கும் ஏராளமான போர்களுக்கும், சண்டைக்கும், கொலைவெறி தாக்குதலுக்கும், ரத்த ஆறுகளுக்கும், பசிக்கும், பஞ்சத்திற்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜெருசலேம் காரணமாகின்றது

உலகின் ஒவ்வொரு மனிதனையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கும் விவகாரம் இந்த ஜெருசலேம்தான், இந்த புனித இடம் தான்.

ஒவ்வொரு மனிதனும் என்று ஏன் சொல்கின்றோம் என்றால், இதோ பிலிப்பைன்ஸில் தீவிரவாதிகள் தாக்குதல், கத்தார் பிரச்சினையில் தமிழ்நாட்டில் கதறுகின்றார்கள், எப்படி?

ஈழ போராளிகளுக்கு அராபத் ஆதரவளித்ததும், பின் கொழும்பு இஸ்ரேலை அழைத்ததும், ராஜிவ் தலையிட்டு அவர் உயிர் வரை சென்றதும், முள்ளிவாய்க்கால் கொடூரம் நிகழ்ந்ததும் ..

சதாம் அளிக்கபட்டு, இன்று சிரியா நொறுக்கபட்டு, எண்ணெய் விலை வீழ்ந்து ரஷ்யா களத்திற்கு வந்து, வடகொரியா பொங்கி எழுந்து..

இந்த பிரச்சினைகளின் மூலபுள்ளி ஜெருசலேமில்தான் தொடங்கும், மேற் சொன்னது கொஞ்சம் தான் ஆழமாக பார்த்தால் ஏராள சம்பவங்களை சொல்லலாம்

உலகில் இந்த ஜெருசலேமால் பாதிக்கபடாத மனிதனே இல்லை, பெரும் இம்சை பாதிப்புக்கு உட்பட்டது யார் தெரியுமா? இந்தியா எப்படி?

இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுங்கள்,இந்த ஜெருசலேமிற்காக போப்பாண்டவர் யுத்தம் புரிந்து சிக்கலாகிதான் திருச்சபை உடைந்தது, அதன் பின்புதான் பிரிவினை கோஷ்டிகள் உதயமாயின‌

இன்று இந்தியாவெங்கும் “அல்லேலூயா”, “பவர்”, “பயர்” “அதோ வருகிறார்” என பல எழுப்புதல் அழிச்சாட்டியம் நடைபெற்று தொலைய அந்த ஜெருசலேம்தான் காரணம்.

ஒவ்வொரு மனிதனையும் அந்த ஜெருசலேம் எப்படி பாதிக்கின்றது என்பதற்கு ஏராளமான விஷயங்கள் உண்டு.

என்ன சொல்வது? அது கடவுளின் நகரம் என்றுதான் பைபிள் சொல்கின்றது, ஆனால் அதனால் சிந்தபட்ட ரத்தம் கொஞ்சமல்ல, புனிதமான இயேசுவின் ரத்தம் முதல் நேற்று ஒரு பாலஸ்தீன சிறுமியின் களங்கமில்லா ரத்தம் வரை அந்நகருக்காகத்தான் சிந்தபட்டது

இதனாலோ என்னவோ, பைபிளின் ஒரு இடத்தில் மலை உச்சியில் இருந்து அதனை கண்ட இயேசு கண்ணீர் விட்டு அழுகின்றார்

அது பெரும் அழிவினை கொண்டுவரும் நகரம் என அவருக்கு தெரிந்திருக்குமோ என்னமோ, இன்றுவரை அந்நகரால் கண்ணீரும், ரத்தமும் ஓடிகொண்டே இருக்கின்றது

இன்னும் ஓடும், யாராலும் தடுக்க முடியாத காரியம் அது, ஆனானபட்ட இயேசு பிரானாலே முடியாதபொழுது யாரால் முடியும்?