உலகில் நீண்ட நாள் மன்னராக இருந்தவர் தாய்லாந்து அரசர் பூமிபால்

உலகில் நீண்ட நாள் மன்னராக இருந்தவர் தாய்லாந்து அரசர் பூமிபால்

அரசபதவி என்பது நிரந்தரமானதுதான், ஆனால் அதில் மக்கள் விரும்பும் வண்ணம் எப்படி ஆட்சி செய்தார் அவர் என்பதில்தான் அவர் சிறப்பு இருக்கின்றது

கிட்டதட்ட 70 ஆண்டுகள் தாய்லாந்தை ஆண்டவர் அவர், அவருக்கு எதிராக ஒரு முணுமுணுப்பு இல்லை, அதிருப்தி இல்லை மாறாக அவருக்கே தேசமே ஒத்துழைத்தது

அவர் இறந்து ஒருவருடம் துக்கம் கொண்டாடி இப்பொழுது உச்சகட்ட மரியாதையினை அவருக்கு கொடுக்கின்றது தாய்லாந்து

மிகபெரும் இக்கட்டில் போதை பொருளும் இன்னும் பிற விவகாரங்களிலும் சிக்கியிருந்த தாய்லாந்தினை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டவர் அவர்

விவசாய முன்னுரிமை, தொழில் வசதிகள் இன்னபிற விவகாரங்களில் கவனம் செலுத்தி நாட்டை வழிநடத்தியவர்

அரசன் அப்படி தங்களோடு இறங்கி தங்களை வழிநடத்தியதால் அவரை தெய்வமாகவே வணங்கினர் மக்கள்

கிட்டதட்ட பாகுபலி போல அவர் கொண்டாடபட்டார்.

தாய்லாந்தின் இயற்கை வளங்களை எல்லாம் மக்கள் வாழும் வழியாக மாற்றிகொடுத்தவர் அவர்தான்

அப்படி ஒரு மன்னன் வராவிட்டால் தாய்லாந்து மியன்மார் போலவோ, கம்போடியா போலவோ வழிதவறி போயிருக்கும்

மிக நீண்டகாலம் தங்களை வழிநடத்திய அந்த அரசனுக்கு தாய்லாந்து கடவுளுக்கு நிகரான அஞ்சலியினை செலுத்தி வணங்கிகொண்டிருக்கின்றது

உண்மையான மக்கள் நல அதிபர்கள் மக்களுக்கு தெய்வமாய் தெரிவார்கள் என்பதற்கு மன்னர் பூமிபால் பெரும் உதாரணம்