உலகில் பல நாடுகளிடம் அணுகுண்டு உள்ளது

உலகில் பல நாடுகளிடம் அணுகுண்டு இருக்கின்றது, ஏவுகனையும் இருக்கின்றது, அவற்றை வைத்துகொண்டு அவை எல்லாம் மிரட்டும் தொணி தாளமுடியவில்லை

இஸ்ரேல், ஈரான், வடகொரியா எல்லாம் அந்த வகை. எதும் அண்டை நாடுகளோடு சிக்கல் என்றால் அவர்கள் சீற்றம் அப்படி இருக்கும்

அணு பலம், ஏவுகனை பலம் கொண்டு ஒவ்வொரு நாடும் அண்டை நாடுகளை எல்லாம் ஆட்டி வைக்கின்றது, எல்லா ஆயுத அரசுகளும் அப்படித்தான்

இந்த உலகில் மட்டுமல்ல, அண்ட சராசரத்திலே அணுகுண்டை வைத்து கொண்டு ஒரு நாடு மிகுந்த கட்டுப்பாடோடு இருக்கின்றது என்றால் இது இந்தியாதான்.

சீனா என்றால் கொஞ்சம் யோசிக்கலாம், பாகிஸ்தான் என்றால் கூட இந்தியபொறுமைக்கு அர்த்தம் உண்டு என சொல்லலாம்,

ஆனால் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் எல்லாம் பொறுமை காத்து கொண்டிருக்கின்றது அல்லவா?

இதனை என்ன அர்த்ததில் சேர்ப்பது?

கொஞ்சம் ஓவராகத்தான் அடக்கமாக இருக்கின்றோம் போலிருக்கின்றது