உலகுக்கே தெரிந்த உண்மை அயோத்திக்கும் அயோத்தி மன்னனுக்கும் தெரியாமல் போனது சோகம்..
ராவணனுக்கு விருப்பமில்லா பொண்ணை தொட்டால் தலை வெடித்துவிடும் எனும் சாபம் உண்டு
எல்லோருக்கும் அந்த சாபம் தெரிந்திருகின்றது, இன்று உள்ளவர்கள் வரை தெரிந்திருக்கின்றது
வால்மீகிக்கும் கம்பனுக்கும் தெரிந்திருக்கின்றது
துரதிருஷ்டவசமாக விஸ்வாமித்திரர், ராமர், அனுமர் உட்பட பலருக்கும் அயோத்தி மக்களுக்கும் தெரியவில்லை
ராவணன் கூடவே இருந்த விபீஷ்ணனுக்கும் தெரியவில்லை, தெரிந்தாலும் அவனும் ராமனிடம் சொல்லவில்லை, பழனிச்சாமி போல நாற்காலி கிடைத்தால் போதுமென இருந்துவிட்டான்
ராவணனுக்கு அப்படி ஒரு சாபம் இருப்பது அயோத்திக்கு தெரிந்தால் ஏன் வீண் சந்தேகம்? ஏன் வீணான தீகுளிப்பு?
தெரிந்தால் சீதையினை நெருப்பில் இறக்கியிருப்பார்களா? ராமனும் தன் இரு மகன்களை பிரிந்திருப்பானா?
இல்லை சீதைதான் பூமாதேவியிடம் மனம் வெறுத்து இறங்கியிருப்பாளா?
உலகுக்கே தெரிந்த உண்மை அயோத்திக்கும் அயோத்தி மன்னனுக்கும் தெரியாமல் போனது சோகம்..