உலகெல்லாம் வம்பிழுக்கும் டிரம்ப் இப்பொழுது துருக்கியுடன் மல்லுகட்ட தொடங்கிவிட்டார்
உலகெல்லாம் வம்பிழுக்கும் டிரம்ப் இப்பொழுது துருக்கியுடன் மல்லுகட்ட தொடங்கிவிட்டார்
அதாவது டிரம்ப் ஒரு கிறிஸ்தவ வெறியர், கிறிஸ்தவ தீவிரவாதி. இதனை மிக நுட்பமாக கவனித்த அல்லேலூயா கோஷ்டிகள் அமெரிக்கா துணையுடன் உலகெல்லாம் “அங்கே பார் இயேசு வருகிறார்..” என குத்தாட்டம் போட்டு வருகின்றன
அப்படி ஒரு கும்பல் இஸ்லாமிய துருக்கியிலும் அட்டகாசம் செய்தன, காரணம் விசித்திரமானது
அக்கால திருச்சபைகள் அதாவது செயின்ட் பால் போன்றவர்கள் துருக்கியில்தான் முதல் சபையினை உருவாக்கினார்கள்
எபேசு முதலான முதல் 7 சபைகள் இன்றும் துருக்கியில் உண்டு, சுருக்கமாக சொன்னால் ஜெருசலேம், வாடிகன் அடுத்து கிறிஸ்தவருக்கு முக்கியமான இடம் துருக்கி
இதனால் அக்கோஷ்டிகளின் இலக்கானது துருக்கி
இதை கவனித்த துருக்கியின் எர்டோகன் அந்த போதனை கும்பலை பிடித்து சிறையில் போட்டுவிட்டார்
இது டிரம்பின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு விஷயம் பற்றி எரிகின்றது, ஏற்கனவே எர்டோகன் மேல் எரிச்சலில் இருக்கும் டிரம்ப் இதனால் துருக்கி பொருளாதார தடையினை நோக்கும் என எச்சரிக்கின்றார்
துருக்கியோ எங்கள் மத வழிபாட்டில் தலையிட யாருக்க்கும் உரிமை இல்லை என எச்சரிக்கின்றது
ஐரோப்பாவில் ஒரே இஸ்லாமிய நாடு துருக்கி என்பதால் ஐரோப்பா ரஷ்யா எல்லாம் வாய் திறக்கவில்லை
போகிற போக்கில் கிறிஸ்தவ இஸ்லாம் மோதலாக துருக்கி விவகாரம் போகும் போலிருக்கின்றது