உலகை அச்சுறுத்தும் நிகழ்வுகள் சூழ தொடங்கிவிட்டன.

உலகை அச்சுறுத்தும் நிகழ்வுகள் சூழ தொடங்கிவிட்டன, இதுவரை தைரியமாக இருந்த பெரும் அதிகார பீடங்கள் கூட அசைய தொடங்கிவிட்டன‌

அமெரிக்காவில் 7 லட்சம் பேருடன் வெறியாட்டம் ஆடும் கொரோனா, வழக்கம் போல நேற்றும் 2.5 ஆயிரம் பேரை பலிவாங்கிவிட்டது

ஆம் வழக்கம் போல‌

ஐரோப்பாவில் நிலமை அப்படியே நீடிக்கின்றது அதன் பொருள் கொரோனாவின் தாக்கம் குறையவே இல்லை

மிக மிக அச்சமூட்டும் செய்தி, கொரோனாவின் தாயான சீனா தாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டோம் என சொன்ன சில நாட்களில் ஒரே நாளில் ஆயிரம் பேரை காவு கொடுத்துவிட்டது

கூட்டுக்குள் இருந்த டைனோசர் வெளிவந்ததை போல அரண்டு கிடக்கின்றது சீனா

இனி பெரும் சிக்கலை உலகம் சந்திக்கலாம், நம்பிக்கைகள் எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் மறுபரீசிலனை செய்யபடுகின்றன, சீனாவிடமிருந்து எதுவும் வாங்ககூடாது என அஞ்சி நடுங்குகின்றது உலகம்

உலக நாடுகளின் அச்சத்திலும் நடுக்கத்திலும் இந்தியா ஓரளவு நம்பிக்கையினை தன் மக்களுக்கு கொடுத்திருக்கின்றது, இந்திய நிலை எவ்வளவோ பரவாயில்லை

22 லட்சம் பேரை பாதித்து, 1.5 லட்சம் பேரை கொன்று 50 ஆயிரம் பேரை இரு நாளுக்குள் பறிக்க கழுத்தை நெறித்து கொண்டு இருக்கின்றது கொரொனா, விஷயம் தீர்வதாக தெரியவில்லை

இது தொடர்ந்து நீடிக்க உள்ளூர் தொழில்களை தவிர வேறு எந்த இறக்குமதி ஏற்றுமதியிலும் கொஞ்சநாளைக்கு இந்தியா கை வைக்காமல், தனித்து தவமிருந்து, வேலி கட்டி நிற்பது நலம் என்கின்றது ஆய்வு

இது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு சிக்கல் என்றால் சிக்கல் ஆனால் மக்கள் உயிரை காக்குமா என்றால் காக்கும்

இந்தியர் முன் இரு தேர்வுகள் உண்டு, ஒன்று சிரமத்தை எதிர்கொண்டு உயிரை காப்பது அல்லது பொருளாதாரம் முக்கியம் என்று சீனா இப்பொழுது சிக்கி கிடப்பது போல் சிக்கி கிடப்பது

எது வேண்டுமோ அதை இந்தியர் எடுக்கட்டும்

சீனா யுகானில் இருந்து மக்களை வெளியேற்றும் பொழுது நாம் சொன்னோம், ஒரிடத்தில் இருக்கும் தீயினை ஊரெல்லாம் பரப்புகின்றார்கள் என்றோம்

பொருளாதாரம் முக்கியம் என சீனா செய்த மகா அவசர நடவடிக்கை அவர்களுக்கே வினையாகிவிட்டது, ராகுல்காந்தி என்பவரிடம் ஆலோசனை கேட்டார்களோ என்னமோ?