உலக அரங்கில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு
உலக அரங்கில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருகின்றது
குலதெய்வம் கோவிலுக்கு வந்த மலேசியர்களை தாக்கி இருக்கின்றார்கள், இதில் ஒரு மூதாட்டி கொல்லபட்டிருகின்றார்
அக்கிராமத்தினர் பிள்ளை பிடி கும்பல் என நினைத்து தாக்கி இருக்கின்றார்களாம்
ஊரே திரண்டிருக்கின்றது, அடிப்பதற்கு முன்னால் காவல்துறையினை வரவைத்து விசாரித்திருக்கலாம், தீர கேட்டிருக்கலாம்
கிடைத்துவிட்டார்கள், அடியுங்கள் என மொத்தமாக காட்டுமிராண்டி தனமாக அடித்து கொன்றிருக்கின்றார்கள்
அடிக்கும்பொழுது அவர்கள் எப்படி எல்லாம் கெஞ்சியிருப்பார்கள்? தாங்கள் மலேசியர்கள் என சொல்லியிருப்பார்களா இல்லையா?
அதை கூட காது கொடுத்து கேட்கமுடியா நிதானமில்லா கூட்டமா இது?
பொதுவாக மலேசிய மக்கள் புன்னகை மிக்கவர்கள், அவர்களின் ஸ்பெஷாலிட்டி அது, தெரியாதவர் எதிரில் வந்தாலே புன்னகைக்காமல் நகர மாட்டார்கள்
அதுவும் முதிர்ந்த தமிழர்களுக்கு தமிழகம் என்றாலே கண்ணோரம் நீர் கோர்க்கும்
அப்படிபட்ட மூதாட்டி வந்து அக்குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து மகிழ்ந்திருக்கின்றார், ஒரு இயல்பான விஷயம்
மானிட சுபாவம் இது, அதனைத்தான் புன்னகை பூக்க மகிழ்வோடு அந்த மூதாட்டி செய்திருக்கின்றார்
அதற்குள் சந்தேகபட்டு கொன்றிருக்கின்றார்கள்
தமிழகத்திற்கு வெளிநாட்டவர்களும், விட்டுபோன தொடர்புகளும் வர ஒரே காரணம் கோவில்களும் சில பழங்கால சின்னங்களும்
அதுவும் இல்லையென்றால் தமிழகத்தை யார் பார்க்க வருவார்கள்? பொற்கால பழனிச்சாமி ஆட்சியினை கண்டு வியக்கவா?
இது உலக அரங்கில் எதிரொலிக்கின்றது, தமிழகம் காட்டு மிராண்டிகள் வாழும் மாநிலம் என சொல்லுமளவு நிலமை வந்தாயிற்று
இது சுற்றுலா தொழில் முதல் பல தொழில்களை பாதிக்கும் , அப்படி ஒரு கடும் அச்ச சூழல் எழுந்தாயிற்று
தமிழர்கள் உணர்ச்சி வசப்படும் முட்டாள்கள் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கின்றார்கள்
குலதெய்வம் கோவிலை பார்க்க வந்து அங்கேயே உயிர்விட்ட அந்த மூதாட்டிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
எங்கோ இருந்து வந்த தமிழனுக்கு இங்கு பாதுகாப்பில்லை, தமிழன் தமிழன் என ஊளையிடும் ஒரு பயலையும் இப்போது காணவில்லை
தமிழன் தமிழனை கொன்றால் இவர்களை காணவே முடியாது
காயம்பட்ட மற்ற தமிழர்களை எந்த அரசு பிரதிநிதியும் சந்தித்து ஆறுதல் சொன்னதாகவோ, எந்த கட்சி தலைவரும் சந்தித்து வருத்தம் தெரிவித்ததாகவோ தகவல் இல்லை
ஆனால் தமிழக மக்கள் சார்ப்பாக காயம்பட்ட அவர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்
நடந்திருப்பது அவ்வளவு கொடூரமான விஷயம் , விருந்தினராய் வந்தவர்களை இப்படி காயபடுத்தியிருப்பது மாபெரும் கொடுமை
பராசக்தியில் கலைஞர் எழுதுவார் “உள்நாட்டு தமிழன் வாழ வழியில்லை, வெளிநாட்டில் இருந்து வந்த தமிழனுக்கு பாதுகாப்பில்லை”
அது இன்றும் தொடர்வதுதான் மகா சோகம், அந்த திமுகவினரையும் களத்தில் காணவில்லை
ஆந்திராகாரன் தமிழரை கொன்றான் என முழக்கமிட்ட சைமனையும் காணவில்லை
ஒரு பயலையும் அங்கு காணவில்லை, எல்லாம் மோசடி
நடந்த கொடுமைக்காக நாணி மன்னிப்பு கோருகின்றோம்
இனி இம்மாதிரி நடக்காமல் காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை
நடந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுதுறையும் பதில் சொல்லவில்லை,
இதற்கு பதில் சொல்லாமல் ஈராக்கில் இந்தியரை கொல்கின்றார்கள், ஆப்கனில் கடத்துகின்றார்கள் என உலக அரங்கில் இந்தியா எப்படி பேச முடியும்?