உலக அளவில் கவனிக்கபடுகின்றது
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் பாகிஸ்தானுக்கு வந்திருப்பது உலக அளவில் கவனிக்கபடுகின்றது
உலகமே ஒதுக்கி வைத்திருக்கும் ஒரு நாட்டுக்கு, அதுவும் ஆபத்து நிறைந்த நாட்டுக்கு பிரிட்டிஷ் இளவரசர் ஏன் வந்தார் என ஆளாளுக்கு கடும் ஆராய்ச்சி அனுமானங்கள்
இந்த வில்லியம்ஸின் தாய் அதாவது பிரிட்டிஷ் இளவரசி டயானா ஒரு காலத்தில் நம்ம ஊர் நயன் தாரா போல அடிக்கடி காதலரை மாற்றிகொண்டிருந்தவர்

அந்நாளைய உலக அழகரான இம்ரான்கானுக்கும் அவர் ரசிகையாய் இருந்தார், இம்ரான்கானும் அவருக்கு ரசிகராய் இருந்தார்
ஒருவேளை வில்லியம்சிடம் பெருமூச்சோடு தன் பழம் நினைவுகளை இம்ரான் “அதெல்லாம் ஒரு காலமப்பா..” என முதல்மரியாதை சத்யராஜ் போல சொல்லியிருப்பாரோ என்னமோ?
நிச்சயம் அந்த ஆட்டோகிராப் கதைகளை கேட்க பிரிட்டிஷ் இளவரசர் வந்திருக்கமாட்டார்,
விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது
நிலவரத்தை கண் கொத்தி பாம்பாக கவனிக்கும் இந்தியா பிரிட்டிஷ் இளவரசர் காஷ்மீர் பற்றி ஒன்றுமே பேசாமல் கிளம்பிசென்றதை பார்த்து தலையாட்டிகொண்டிருக்கின்றது..