உலக கால்பந்து போட்டி 2018: வாழா சாவா? போராட்டத்தில் இருக்கின்றார் மெஸ்ஸி
சட்டசபையில் எடுக்கும் நம்பிக்கை தீர்மானம் போல மிக முக்கிய போட்டிக்கு அர்ஜெண்டினா தயாராகின்றது
நைஜீரியாவினை அது சும்மா வென்றால் போதாது, விஜயகாந்தினை வைகோ சோலி முடித்தது போல பெரும் அடியாக கொடுத்து வெளியேற்ற வேண்டும், அப்பொழுதுதான் அது அடுத்த சுற்றுக்கு செல்லும்
அர்ஜென்டினா முழுக்க பிரார்த்தனைகள் நடக்கின்றன, மனரீதியாக அவர்களை உற்சாகபடுத்தும் பொருட்டு மாராடோனா நேரில் கால்பந்து குழுவினை சந்திக்கின்றார்
இன்னும் பலமாக பல வியூகங்களை வகுக்கின்றார்கள், பார்க்கலாம்
வாழா சாவா? போராட்டத்தில் இருக்கின்றார் மெஸ்ஸி
ஆனால் இவ்வாறான நெருக்கடியான கட்டங்களில் அவர் பிரகாசிப்பதே இல்லை, அவர் போக்கில் விட்டால் மிக சிறப்பாக விளையாடுவார் என்பதே வரலாறு சொல்கின்றது
ஏதும் அதிசயம் நிகழுமா என இன்றிரவு தெரியும்..