உலக செஞ்சிலுவை & செம்பிறை நாள்

 

Image may contain: text

அப்பொழுது ஆஸ்திரியா ஹங்கேரி என்றொரு வல்லரசு இருந்தது. அதற்கும் ஜெர்மனுக்கும் உறவும் இருந்தது. அவர்களும் உலகாள ஆசைபட்டனர்

இதில் ஆட்டோமன் சாம்ராஜ்யமும் சேர்ந்து கொண்டது

அதனை ஒழித்துகட்ட பிரிட்டன் தொடங்கியதே முதலாம் உலகப்போர், அது ஐரோப்பாவில் பெரும் அழிவினை கொடுத்தது, காயம்பட்டோரை கூட மீட்க முடியவில்லை

அப்பொழுது ஈஸ்டர் பண்டிகை வந்ததால் 3 நாள் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என முடிவு செய்தார்கள், அப்பொழுது ஹென்றி டியூனண்ட் என்பவர் சிகப்பு சிலுவை கொடியுடன் சாமாதான அடையாளம் காட்டிவிட்டு தன் குழுவுடன் மீட்பு பணி செய்தார்

அந்த குழு சிகப்பு சிலுவை குழு எனப்பட்டது, ஆங்கிலத்தில் ரெட் கிராஸ்

எந்த சிகப்பு சிலுவை கொடியினை ஏந்தி சிலுவைபோர் என கடும் ரத்தம் சிந்தபட்டதோ, அதே சிகப்பு சிலுவை இப்பொழுது ஆறுதலாயிற்று

அது மீட்புகுழு அடையாளமும் ஆயிற்று. யாரும் சண்டையிடுங்கள், நாசமாய் போங்கள் ஆனால் அடிபட்டோருக்கு நாங்கள் உதவுவோம் என அவர்கள் உதவினார்கள்

இதனால் அவர்கள் மேல் அனுதாபம் கூடிற்று

Image may contain: 1 personகொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு ஆதரவு பெருகி செஞ்சிலுவை சங்கம் வளர்ந்தது, பின் போர் மட்டுமல்ல எங்கெல்லாம் மக்கள் பாதிக்கபடுகின்றார்களோ அங்கெல்லாம் அது சேவையாற்றியது

சிலுவை அடையாளம் என்பதன் உண்மை நோக்கத்தை அதுதான் நிறைவேற்றிகொண்டிருக்கின்றது

யாருக்கு தேவையோ அவர்களுக்கு ஓடிவந்து உதவுவார்கள், கைதூக்கிவிடுவார்கள். பாதிக்கபட்டவன் எந்த மதம், இனம், மொழியாக இருந்தாலும் சிக்கல் இல்லை

மனிதன் என்ற ஒரு தகுதி இருந்தால் போதும்

சிலுவையின் மாண்பினை போப் காக்கவில்லை, பிரிவினை கோஷ்டி காக்கவில்லை. உண்மையில் செஞ்சிலுவை சங்கமே உண்மையான கிறிஸ்துவத்தை தாங்கி நிற்கின்றது

இது தொடங்கபட்ட கொஞ்ச காலத்தில் மத அடையாள சர்ச்சை வந்தது, அதற்கென்ன நல்ல இஸ்லாமியராக இருந்தால் சிகப்பு பிறை வைத்து கொள்ளுங்கள் இணைந்து செயலாற்றலாம் என்றார்கள்

இன்று செஞ்சிலுவை, செம்பிறை உலகெல்லாம் பரவி பணியாற்றுவது இதனால்தான்

இந்த உலகில் மிக நன்றிகுரியவர்கள் செஞ்சிலுவை சங்கத்தார், யார் பாதிக்காப்ட்டாலும் ஓடிவருவார்கள். போரில் சீரழிந்த நாடுகளுக்கு ஒரே ஆறுதல் அவர்கள்தான்

சிரியா, ஆப்கன் என பல நாடுகளில் அவர்கள் பணி பெரிது, பாராட்டுகுரியது

ஈழத்திலும் மக்களை புலிகள் மனித கேடையமாக பயன்படுத்துவது குறித்து முதலில் வருந்தியது அவர்களே, இலங்கையிலும் அவர்கள் பணி ஏராளம்

இன்று செஞ்சிலுவை சங்கத்து நாள், போரினால் பாதிக்கபட்டவர்களுக்கு ஏதும் செய்ய வேண்டும் என எண்ணிய ஹென்றி டியூனண்ட் பிறந்த நாள்

அதுவரை போர் என்பது கொடியது, வென்றவர்கள் கொள்ளையிட்டு மகிழ்வார்கள். காயம்பட்டு களத்தில் இருப்பவர்கள் அப்படியே சாவார்கள் அல்லது கொல்லபடுவார்கள்

அவர்களை கவனிக்கவோ அல்லது பாதிக்கபட்ட மக்களை கவனிக்கவோ யாருமில்லை, மிக சில மன்னர்களே அப்படி பெருந்தன்மையாக இருந்திருக்கின்றார்கள்

பெரும்பான்மை போர்கள் நினைத்துபார்க்க முடியா கொடூரத்துடன் முடிந்திருக்கின்றன, அப்படி ஒரு கொடூர காட்சியினை கண்டபின்புதான் அசோகரே மனம் மாறினார்

அவ்வகையில் இந்த ஹென்றி டியூனண்ட் என்பவர் “இரண்டாம் அசோகர்” அல்லது “ஐரோப்பிய அசோகர்”

இன்று காணும் மீட்பு உதவி எல்லாம் அவரால் வந்தது, அந்த பெருமகனை நினைத்து நன்றி செலுத்திவிட்டு, உலகெல்லாம் உள்ள செஞ்சிலுவை, செம்பிறை சங்கத்தாருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்

(இப்பொழுது வந்து உனக்கு சிகப்பு சிலுவை, சிகப்பு பிறைதான் தெரியுமா? எங்கள் சிகப்பு ஆர்.எஸ்.எஸ் கொடி தெரியாதா? ஏய் மதவெறியனே என கத்துவார்கள்

சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ் மீட்பு பணி செய்தது. பிரிவினை காலம், சீனப்போர், வங்கப்போர் காலங்களில் அதன் சில உதவிகள் கவனிக்கதக்கவை

ஆனால் அதன்பின் மசூதி இடிப்பு இன்னும் பல கலவர சர்ச்சைகளில் சிக்கி அது மீட்பு படையாக இல்லாமல் மத இம்சை படையாக மாறிவிட்டது)