உலக மகா பொய்

கருணாநிதி உடல்நிலை சரியில்லாதபோது அவரைக் காண முதலில் அனுமதி கேட்டது விஜயகாந்த் . கடைசி வரைக்கும் ஸ்டாலின் அனுமதி தரவில்லை: பிரேமலாதா

உலகமாகா பொய் என்பது இதுதான், பச்சைபொய் என்பது இதுதான்

உடல்நலம் சரியில்லா நிலையிலும் கலைஞரை காண யாருக்கும் தடை இல்லை, அப்படி விதிக்கபடவுமில்லை

எல்லோரும் சென்று பார்த்தார்கள்

ஏன் மிக சாதாரணமான அற்பபதரான‌ என்னாலே அவரை சந்திக்க முடிந்தது

அதிகாரமிக்கோரும் செல்வாக்கு மிக்கோரும் சமூகத்தின் மிக கீழ்மட்டமான என் போன்றோரும் அவரை காணமுடிந்தது

கலைஞர் எனும் மாமனிதனின் குடும்பம் அரசியல் வேறு, மக்கள் சந்திப்பு வேறு என்பதில் மிக கவனமாக இருந்தது

யாரும் அவரை பார்க்க தடையே இல்லை, ஸ்டாலின் அனுமதி எல்லாம் தேவையே இல்லை

இன்னொன்று ஸ்டாலின் அப்படி செய்பவருமல்ல, எல்லோரும் அவரை சந்திப்பதைத்தான் அவரும் விரும்பினார்.

கலைஞரின் கடைசி மூச்சுவரை திமுக‌ தொண்டர்களுக்கு, கலைஞரை சந்திக்க வந்தவர்களுக்கு கோபாலபு இல்ல கதவுகள் திறந்தே இருந்தன எனும் பெருமை அவர்களுக்கு எந்நாளும் உண்டு

அதை நிலைநிறுத்த தயக்கமின்றி எல்லோரையும் வரவேற்றார்கள்

விஜயகாந்த் நினைத்திருந்தால் ஓடிசென்று பார்த்திருக்க முடியும், தடுப்பார் யாருமிலர்

ஆனால் விஜயகாந்தின் குற்ற உணர்வே அவரை செல்லவிடாமல் தடுத்தது, அதில் சந்தேகமில்லை. கலைஞரை எதிர்கொள்ள அவர் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை

கடந்த தேர்தலில் கலைஞரின் அழைப்பினை புறக்கணித்ததை தன் மிகபெரும் அரசியல் தவறாக கிட்டதட்ட தற்கொலையாகவே நினைத்து கலங்கினார் விஜயகாந்த்

அதுதான் கலைஞர் சமாதியில் விஜயகாந்த் வடித்த கண்ணீர் சொல்லும் உண்மை

விஷயம் அப்படி இருக்கையில் இந்த பிரேமலதா உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பேசிவருவது கண்டிக்கதக்கது

புலம்பி ஒப்பாரி வைத்து மூக்கு வடித்து அனுதாபம் தேடுவது என நாடகத்தை முடிவெடுத்துவிட்ட பிரேமலதா வேறு காரணங்களை தேடினால் நல்லது