உலக வானொலி நாள்
உலகத்திற்கு ரேடியோவினை கொடுத்தது மார்கோனி என்றாலும் ரேடியோவிற்கான நாள் என ஒன்றுமில்லை
உலகில் எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் ரேடியோவிற்கான மவுசே தனி, இன்றும் போனில் வந்து நம் காதோரம் ஒலித்துகொண்டே இருக்கின்றது
அச்சுக்கலை போலவே உலகில் மாபெரும் புரட்சியினை நிகழ்த்தியது ரேடியோ, மானிடன் இருக்கும் காலம் வரை அதுவும் இருக்கும்
அப்படிபட்ட ரேடியாவின் தினத்தை என்று கொண்டாடலாம் என 2010ல் திட்டம் தீட்டினார்கள், ஆளுக்கொரு கருத்து இருந்ததால் ஆளுக்கொரு நாளில் கொண்டாடினார்கள்
இறுதியாக பொதுமுடிவுக்கு வந்தார்கள் 1946ல் ஐ.நா வானொலி என ஒன்று உருவானது, அது பிப்ரவரி 13ல் உருவானது
உடனே ஒருமித்த கருத்தாக இந்நாள் உலக வானொலி நாள் ஆனது
வானொலியால் வளர்ந்த தலைமுறை ஏராளம் உண்டு, அதன் மூலம் பெற்ற அறிவுகளும் நல்ல விஷயங்களும் ஏராளம்

இன்றும் வேலை செய்யும் அலுப்பு தெரியாமல் இருக்க, தனிமை தவிர்க்க அது ஐடி தொழிலோ , பயணமோ, கார் ஓட்டும் தொழிலோ, பீடி சுற்றுதலோ, உணவக தொழிலோ எது என்றாலும் ரேடியோ இல்லா நிலை இல்லை
சில தொழில்கள் ரேடியோ இன்றி இயங்காது என்றாயிற்று
ரேடியோ நிலையம் இந்தியாவில் ஆகாசவாணி என்றாயிற்று , பின் தமிழில் வானொலி என அழைக்கபட்டாலும் சென்னையில் அது ஆகாசவாணி என்றே அரசு பெயரில் இருந்தது
ஆகாசவாணியினை வானொலி என மாற்றும்வரை அதை புறக்கணிப்போம் என போராட்டம் எல்லாம் செய்தனர் திராவிட கட்சிகள்
இதனால் அது சென்னை வானொலி நிலையம் ஆயிற்று
ஆனால் பின்னாளில் சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி என பெயர்வைத்த பொழுது சத்தமே இல்லை, அவர்களுக்கே அது நினைவு இல்லை
ஆகாஷவாணியினை வானொலி என மாற்று என கொடிபிடித்தவர்கள்தான் பின்பு தொலைகாட்சி என வைக்காமல் டிவி என வைத்து கொண்டார்கள் அதுவும் சன் டிவி
இது தமிழக அரசியலின் இன்னொரு முகம், போகட்டும்
இன்று உலக வானொலி நாள் என்பதால் வானொலியில் பணியாற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்