உளறுகின்றார் நம் காமெடி ஸ்டார் தமிழிசை

மறுபடியும் பெரும் உளறலை உளறுகின்றார் நம் காமெடி ஸ்டார் தமிழிசை

அதாவது ஜெயா மரணம், டெங்கி எல்லாம் தாண்டி இந்த யழவு மெர்சல் விவகாரம் அரசியலாகிவிட்டது, ஜிஎஸ்டி விவகாரத்தில் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக‌ வாய் திறக்கின்றது. சிதம்பரம் ராகுல்காந்தி எல்லாம் விஜய்க்கு கை கொடுக்கின்றார்கள்.

இதில் தமிழிசைக்கு கோபம் பொத்துவிட்டது,

பதிலுக்கு இப்படி திரைப்படங்களை நீங்கள் கண்டிக்காமல் விட்டதால்தான் நாடு சீரழிந்துவிட்டது என்றாவது சொல்லியிருக்கலாம், மாறாக உளறிவிட்டார்

ஆம், எம் தமிழினம் அழியும்பொழுது நீர் எங்கு சென்றீர் ராகுல் என கொதித்திருக்கின்றார்

நடப்பது மெர்சல் நாடகம், இதில் ஈழபிரச்சினை எங்கிருந்து வந்தது?

சரி ராகுல் தந்தையினை இழந்தவர் அமைதி காத்ததில் அர்த்தமுண்டு, முள்ளிவாய்க்கால் சம்பவம் நடக்கும்பொழுது தமிழிசை எங்கு சென்றார்?

டெல்லியில் பாஜக என்ன செய்தது?

ஆக இலங்கையில் என்னமும் நடக்கட்டும் என எல்லா கட்சிகளும் மவுனமாக இருந்தது உண்மை

இதில் இப்பொழுது திடீரென தமிழிசை சம்பந்தமில்லாமல் உளறுவது ஆச்சரியம்

இன்னும் என்னெவெல்லாம் ராகுலைபார்த்து தமிழிசை கேட்பாரோ தெரியாது, ஆனால் இப்படி எல்லாம் கேட்க வாய்ப்பு உண்டு

இந்திரா எமர்ஜென்சி கொண்டுவரும்பொழுது என்ன செய்தீர்கள் ராகுல்? சீனா யுத்தம் தொடுக்கும்பொழுது என்ன செய்தீர்கள் ராகுல்? மகாத்மா கொல்லபட்டபொழுது நீர் என்ன செய்தீர் ராகுல் என பல கேள்விகள் கேட்கபடலாம்

தமிழிசையின் இந்த கேள்வி பாஜகவிற்கு சங்கடம் ஏற்படுத்தும் கேள்வி, அப்படியானால் 7 ராஜிவ் கொலையாளிகளை பாஜக விட்டுவிடுமா? ஈழத்தில் இப்பொழுது பாஜக கிழிப்பதென்ன, ராஜபக்சேவினை போர்குற்றவாளி என மோடி சொல்லாதது ஏன்? என பல கேள்விகள் எழும்

7 கொலைகாரர் விடுவிக்கபட்டால் அது வடக்கே பாஜகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கும்

இப்படியாக பாஜகவிற்கு பல சோதனைகள் வரும், ஏன் அப்படி சொன்னார் தமிழிசை?

ஒருவேளை தமிழிசை குமரி அனந்தனின் ஸ்லீப்பர் செல்லாக பாஜகவில் இருப்பாரோ?