எகிப்தில் நடந்த தாக்குதல்களில் கிட்டதட்ட 300 பேர் பலி

Image may contain: one or more people

உலகினை அதிர வைத்திருக்கும் தாக்குதல் எகிப்து சினாய் பகுதியில் நடந்திருக்கின்றது, உலகம் முழுக்க கடும் கண்டனமும், இறந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தபடுகின்றது

சினாய் என்பது சினை எனப்படும் தமிழ்பெயரே. எகிப்திற்கும் தமிழகத்திற்கும் அக்காலமே தொடர்புகள் இருந்தன் இப்பகுதி சினையுற்ற அதாவது கருத்தரித்த பெண்ணின் வயிறு போல இருப்பதால் சினை என்று தமிழரால் பெயரிடபட்டு பின் சினாய் ஆனாது

அங்குதான் இந்த அட்டகாசம் நடந்திருக்கின்றது

முதலில் குண்டு வெடித்திருக்கின்றது, மக்கள் வெளியேறும்பொழுது சுற்றி நின்று சுட்டிருக்கின்றார்கள். கிட்டதட்ட 300 பேர் பலி

எகிப்தில் நடந்த தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதல் இதுதான்

அல்கய்தா ஆக்கிரமிப்பு செய்த இடம், பின் மற்ற குழுக்களும் வந்தன, இன்ன்னும் யாரும் உரிமை கோரவில்லை

இம்மாதிரி கோழைதனமான, புனிதமான மசூதியினை ரத்தகாடாக மாற்றுபவர்கள் எல்லாம் போராளிகள அல்ல, மனித ரகத்திலே சேரமாட்டார்கள்

மதத்தின் பெயரால் இந்த மானிட பேரழிவு கொலைகளை நடக்கும் அந்த பாதக கும்பல் அல்லாவின் பெயரை சொல்ல கூட தகுதியற்றவர்கள், சாத்தானின் தத்துபிள்ளைகள் அவர்கள்

நாளை மும்பை தாக்குதலின் நினைவு நாள், அதுதான் இந்தியாவில் கடைசியாக நடந்த கொடூர தாக்குதல்

பாஜக ஆட்சிக்குவரும்பொழுது அந்த படுபாவிகள் மறுபடியும் பெரும் தாக்குதலை தொடுப்பார்கள் என்ற அச்சம் இருந்தது, ஆனால் இதுகாறும் இல்லை, நமது பாதுகாப்புபடை முடிந்தளவு திறமையாக தடுத்தே வருகின்றது

அந்த தாக்குதலே இந்தியாவில் நடந்த கடைசி தாக்குதலாகவும், எகிப்தில் நடந்திருக்கும் துயரமே கடைசி துயரமாகவும் இருக்கட்டும்

மும்பையில் இறந்தவர்களுக்கும் எல்லையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை, இவர்கள் தீவிரவாதத்தின் கொடூர முகத்தை இந்தியாவிற்கு புரிய வைத்து உயிர்விட்ட தியாகிகள்

அவர்களுக்கு வீர வணக்கமும், எகிப்து சகோதரர்களுக்கு இதயம் கனத்த அஞ்சலியும் தெரிவித்து கொள்வோம்…..