எங்களை பகைத்துக்கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது: திவாகரன்
” ’எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது ஒரு விபத்து. எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவரை 420 எனக் கூற எனக்கு பயமில்லை.
இன்றுமாலை பழனிச்சாமி யார் என காட்டுவேன்.
பதவி இருக்கின்ற காரணத்தால் ஆடுகிறார்கள். ’அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் – அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்’ என்று சொல்லுவார்கள். அப்படித்தான் இருக்கிறது இவர்களின் செய்கைகள்.” : தினகரன்
அதாவது அன்னார் சொல்லவரும் கருத்து இதுதான்
* பழனிச்சாமி முதல்வரானது விபத்து, ஆனால் இவர் துணை பொதுசெயளாரனது எல்லாம் விபத்து அல்ல.
* பழனிச்சாமியினை முதல்வராக்கியது தினகரன், வோட்டு போட்ட தமிழக மக்களை பற்றி எல்லாம் யாரும் பேசகூடாது.
*உண்மையான பழனிச்சாமியினை இவர்கள் எங்கோ கட்டிவைத்துவிட்டு அவரைப்போல் இருக்கும் டூப் பழனிச்சாமியினை முதல்வராக்கிவிட்டார்கள். அந்த ஒரிஜினல் பழனிச்சாமி தினகரனால் இன்றுமாலை மீட்க்படுவார்
* பழனிச்சாமி 420தான், அதாவது ஒரு 420 இருந்த இடத்தில்தான் இன்னொரு 420யினை அமர்த்த முடியும். அந்த அடுத்த 420 யாராகவும் இருக்கலாம், தினகரனாகவும் இருக்கலாம் அதனால் பயமில்லை
அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் என்பது இவரது மைன்ட் வாய்சாகவும் இருக்கலாம்
சுடதெரியாமல் ராமசந்திரனை சுட்ட எம்.ஆர் ராதா ஒருமுறை அவரிடம் கேட்டார் இப்படி
“ஏண்டா ராமசந்திரா? உனக்கு எதுக்கு அரசியல். அதுக்கெலாம் நல்லவங்க, ஜனங்கள நேசிக்கிற பெரியவங்க இருக்குறாங்க பாத்துப்பாங்க
நீ சினிமாவுல கத்திசண்டை போட்டுட்டு உன் போக்குல நடி, அரசியல் பக்கம் போகாதே..”
எங்களை பகைத்துக்கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது: திவாகரன்
யார் தொடர முடியாது? மோடியா அல்லது டிரம்பா அதனையும் தெளிவாக சொல்லிவிடுங்கள் அய்யா..