எங்கிருந்து இத்தேசம் உருப்படும்?
சங்கரின் கொலையாளிகளை தூக்கிலிட்டே தீரவேண்டுமாம், ஆனால் ராஜிவ் கொலையாளிகளை தொட்டுவிட கூடாதாம், அப்படியே விடுவித்துவிட வேண்டுமாம்.
இவ்வளவிற்கும் சங்கர் தனியாக செத்தான், ராஜிவ் 17 பேரோடு செத்தார். கை கால் போனவர்கள் கணக்கு தனி
ஆக நாட்டுபற்றை விட சாதிவெறி ஓங்கி நிற்கும் சமூகம் இது என்பது தெரிகின்றது
பின் எங்கிருந்த்து இத்தேசம் உருப்படும்?
சேது சமுத்திர ராமர் பாலம் மனிதரால் கட்டபட்டது : அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவிப்பு
இவ்வளவு நாளும் இன்றி இப்பொழுது ஏன் அவசர அறிவிப்பு?
சேது கால்வாயினை தோண்டும் ஆரம்ப சோதனையில் அரசு ஈடுபட்டுள்ளது, அது செயல்பாட்டுக்கு வந்தால் கொழும்பு பாதிக்கும், கொழும்பில் உள்ள சில அமெரிக்க வஸ்துகளுக்கு சிக்கல்
எப்படி தடுக்கலாம்? அது மனிதர்களால் உருவாக்கபட்டது என சொல்லிவிட்டால் போதும், மீதியினை கங்கை கரை சாமியார் கூட்டமும் தமிழக ஆண்டிகள் கூட்டமும் பார்த்துகொள்ளும்
ஒரு ஸ்பூன் அளவிற்கு இடிக்க விடுவார்கள்? பின் எங்கிருந்து கால்வாய் தோண்டுவது
அறிவியல் விஞ்ஞான அறிவிப்பிலும் பல அரசியல்கள் ஒளிந்திருக்கின்றன
தமிழனை தமிழனே ஆளவேண்டும், தமிழனை கொல்கின்றார்கள் என்ற சத்தத்தையே காணோம்
கன்னியாகுமரி கடலில் தமிழனை தேடிகொண்டிருப்பதால் இப்பொழுது இந்த தமிழ்தேசியவாதிகளுக்கு ராஜஸ்தான் சம்பவம் இன்னும் எட்டவில்லை போல
தெரிந்தால் சீறி எழமாட்டார்களா?