எங்கே சென்றுவிட்டார் தமிழிசை, கமல்?

இந்திய பொருளாதர தடுமாற்றம், தாஜ்மகால் சிக்கல், சசிகலா பரோல் மறுப்பு என பல சர்ச்சைகள் சூழ்ந்துள்ள நிலையில் தமிழிசையினை காணவில்லை

ஸ்டாலின் செல்லும் காரில் 4 வீல்தான் இருக்கிறது, வங்க கடலுக்கு அப்பால் தாமரை உதிக்கும் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்த அம்மணியினை காணவில்லை

எங்கே சென்றுவிட்டார்?

ஏதும் மாறுவேடத்தில் திமுக கூட்டங்களில் கலந்து குறிப்பெடுக்கின்றாரோ?

 

முன்பொரு காலத்தில் முகலாயர் சர்ச்சை வந்தபொழுது, முகலாயர்கள் அந்நியர்கள் அல்ல, இத்தேசத்திற்கு மங்கா அடையாளம் வழங்கிய இந்தியர்கள் என சொன்ன கமலஹாசன் என்பவரை

இப்பொழுது தாஜ்மகால் பற்றி சர்ச்சை வந்தபொழுது காணவில்லை

ஆக எங்கோ மேகஅப் போட்டுகொண்டிருக்கின்றார்.


யார் தமிழர்? யார் தமிழர் அல்லாதவர்? எனும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களையும், யார் தேசபக்தர்? யார் தேசதுரோகி ?எனும் அதிதீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்களையும் கொஞ்சமும் நோபல் கமிட்டி கண்டுகொள்ளவில்லை

எவ்வளவு மிகபெரும் ஆராய்ச்சி அது? அதில் சிலர் இறங்கி வெற்றி பெற்றிருக்கின்றார்கள்

அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்காத நோபல் கமிட்டியினை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.


ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்: லதா ரஜினிகாந்த்

என்ன மாற்றம்?

வாங்கிய எந்த காருக்கும் தவணை கட்ட வேண்டாம், வசிக்கும் எந்த கட்டடத்திற்கும் வாடகை கொடுக்க வேண்டாம் என்ற மாற்றம்தானே?