எங்கே போனது 6 ஆயிரத்து 500 வோட்டு? : சீமான் ஆதங்கம்

Image may contain: 1 person

என் உழைப்பு என் தம்பிகளின் உழைப்பிற்கு குறைந்தது 10 ஆயிரம் வோட்டு விழுந்திருக்க வேண்டும், எங்கே போனது 6 ஆயிரத்து 500 வோட்டு? : சீமான் ஆதங்கம்

கிடைத்த 3,500 வோட்டே கின்னஸ் சாதனை, இதில் இவருக்கு 10 ஆயிரம் வோட்டு வந்திருக்க வேண்டுமாம்

ஆர்.கே நகரில் நாடார்கள் அதிகம் என்கின்றார்கள், கடந்த முறை தொப்பி சின்னத்தில் தினகரன் பிரச்சாரம் செய்தபொழுது தினகரனுடன் வைகுண்டராஜன் மற்றும் நாடார் சங்க பிரமுகர்கள் போஸ் கொடுத்த படங்கள் வந்ததே அதற்கு சாட்சி

எர்னாவுர் நாராயணன் போன்றோர் எல்லாம் களத்தில் சுழன்றதே இன்னொரு சாட்சி

சீமானுக்கு இந்த நாடார்களிடம் இருக்கும் வரவேற்பு கொஞ்சம் அதிகம், அதற்கு பல காரணங்கள். (பிரபாகரனும் நாடார் என சீமான் ரீல் விட்டிருக்கலாம்)

ஆக அந்த சாதிவோட்டு கை கொடுத்தது என்கின்றார்கள், அதில் அன்னார் 10 ஆயிரம் வோட்டு குறிவைத்திருக்கலாம், ஆனால் தினகரன் கோஷ்டி விடுமா? ஏற்கனவே நாடார் சங்க நிர்வாகிகள் சகிதம் வந்தவர் அவர்

இதனை மறைத்து அன்னார் என்னமோ பெரும் தியாகி போலவும், இவர் தியாகத்திற்கு மரியாதை இல்லை என்பது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்

ஆனால் அன்னாருக்கு ஒரு சிக்கல், இது பாஜக சதி, மோடி சதி அதனால் எனக்குள்ள வோட்டு களவாடபட்டது என அன்னாரால் சொல்லிவிட முடியுமா? முடியாது

6 ஆயிரம் வோட்டு களவெடுக்கபட்டால் அவர்கள் ஏன் ஆயிரம் வோட்டில் தடுமாறபோகின்றார்கள்?

அதனால் பாஜக சதி என்றும் சொல்லமுடியாமல், சாதிவோட்டு எனவும் சொல்ல முடியாமல், என்ன சொல்வது என தெரியாமல் வெரி டெலிகேட் பொசிஷனில் அங்கிள் சிக்கிவிட்டார்

இவ்வளவு நடந்தும் தினகரன் என் வோட்டை பறித்தார் என வாய் திறந்து அன்னார் சொல்லவில்லை அல்லவா? இதன் பெயர்தான் விசுவாசம்