எச்.ஏ.எல் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்..
வரலாற்றில் முதன் முறையாக இந்திய தயாரிப்பு நிறுவணமான தேஜஸ் விமானங்களை வெளிநாட்டு ராணுவ விமான கண்காட்சிக்கு அனுப்பியிருக்கின்றது
ஆம் மலேசியாவில் நடைபெறும் விமான கண்காட்சிக்கு அது அனுப்பபட்டிருக்கின்றது
ஒரு நாடு போர் விமான கண்காட்சி நடத்துகின்றது என்றால் அதற்கு ராஜதந்திர அர்த்தம் என்னவென்றால், நாங்கள் போர் விமானம் வாங்க தயாராக இருக்கின்றோம்
அதற்காக பல நாடுகளுக்கு அழைப்பு விடுக்கபட்டது, பாகிஸ்தானின் ஜே7க்கும் அழைப்பு விடுத்தது அது சீன தயாரிப்பு
ஆனால் பாகிஸ்தான் கலந்துகொள்ளவில்லை
இதனால் இந்திய மற்றும் தென்கொரிய விமானங்களை மலேசியா வாங்க வாய்ப்பு அதிகம்
மலேசியா இதில் அட்டகாச அரசியல் செய்கின்றது
அதாவது மலேசியாவின் பிரதான ஏற்றுமதியான பாமாயிலை வாங்க ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் காட்டவில்லை, ஏதோ சொல்லி தடையிடுகின்றன
அப்படி எங்கள் பாமாயிலை வாங்காவிட்டால் ஐரோப்பிய விமானங்களை வாங்கமாட்டோம் என சொல்லிவிட்டது மலேசியா
இந்நிலையில்தான் விமான கண்காட்சி நடக்கின்றது
அவர்களுக்கு 36 விமானங்கள் தேவையாம், எச்.ஏ.எல்லின் தேஜசும் களத்தில் இருக்கின்றது
ஒரு கேள்வி எழலாம்?
இந்திய படைகளுக்கு இல்லாமல் ஏன் தேஜஸ் வெளிநாட்டுக்கு விற்படும் என்பதுதான் அது.
இந்த ஆண்டிற்குள் 78 தேஜஸ் விமானங்கள் இந்திய விமானபடையிடம் ஒப்படைக்கபடும் என சொல்லியிருக்கின்றது எச்.ஏ.எல்
எப்படியோ வரலாற்றில் முதன் முறையாக இந்திய தயாரிப்பு போர்விமானம் ஏற்றுமதிக்கு வந்திருக்கின்றது
காங்கிரஸ் அரசுதான் இதை தொடங்கியது, மோடி அரசு கைவிடாமல் காத்தது
நாட்டின் பெருமையினை உயர்த்திய எச்.ஏ.எல் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்..