எடப்பாடிக்கு கோவிலில் அர்ச்சனையா?

எடப்பாடிக்கு அர்ச்சனை வீடியோ எல்லாம் வந்து அவர் சாமி ஆக்கபடுவதில் என்ன ஆச்சரியம்?
அவர்கள் கட்சி கோட்பாடே அதுதானே, தகுதி இல்லாதவனை எல்லாம் பெரும் புரட்சியாளனாக , பெரும் திறமைசாலியாக , பெரும் அறிவாளியாக காட்டுவதுதான் அவர்கள் அரசியல்
குல்லா ராமசந்திரனை அப்படித்தான் இதயகனி , வள்ளல் , புர்ச்சி தலைவன், பொன்மன செம்மல் என்றெல்லாம் அவர்களே பட்டம் கொடுத்து பெரும் பிம்பமாக்கினார்கள்
அது பின்பு ஜெயாவிற்கும் தொடர்ந்தது, அவருக்கு பின் சசிகலாவிற்கு மேக் அப் போடுமுன் அவர் சிறைக்கு சென்றார்
இப்பொழுது இந்த பழன்ச்சாமி பக்கம் வந்திருக்கின்றார்கள், சாமி என தொடங்கிவிட்டார்கள்
அன்று ராமசந்திரன் எப்படி புர்ச்சி தலைவன் ஆனார், ஜெயா எப்படி புர்ச்சி தலைவி ஆனார் என்பதை பலர் அறியாமல் இருக்கலாம்
ஆனால் ஒரு தவிட்டு மூட்டை எப்படி சாமியாகின்றது என்பதை காணும் யோகம் நம் எல்லோருக்கும் இருக்கின்றது
அன்றும் இப்படித்தான் ஏமாற்றினார்கள், இன்றும் அப்படியே வருகின்றார்கள், இதை தவிர ஏதும் அறியா “நாடக கம்பெனி” அது.
காமராஜரே மனம் விட்டு சிலரிடம் சொன்ன விஷயம்தான். “இந்த திமுக அதிமுக இரண்டையும் பார்த்தால் திமுக என்பது ஆயிரம் மடங்கு பரவாயில்லைண்ணேன்”
என்னமோ ஒரு வீடியோவில் எடப்பாடி பெயருக்கு அர்ச்சனையாம், இதற்கு பெரும் கலாட்டாக்கள்
நாங்களும் அனுதினமும் தங்க தலைவிக்காக வேளாங்கண்ணி ஆலயம் முதல் பல இடங்களில் திருப்பலி நிறைவேற்றி கொண்டுதான் இருக்கின்றோம்
இப்படியா சொல்லிகொண்டு திரிகின்றோம்?
நிறைகுடம் தளும்பாது, சங்கம் இப்படி ஊரெல்லாம் சொல்லிகொண்டிராது.
அற்பனுக்கு ஆட்சிவந்தால் அர்த்த ராத்திரியில் அர்ச்சனை செய்வானாம்
எடப்பாடிக்கு கோவிலில் அர்ச்சனையா?
விரைவில் டெல்லியும் அதனையே செய்யும் போலிருக்கின்றது