எடப்பாடி சாமிக்கு 18 எம்.எல்.ஏக்கள்

ஒரே குற்றசாட்டு, ஒரே சட்டம் ஆனால் தீர்ப்பு மட்டும் இரண்டாம், நீதிபதிகள் சொல்லிவிட்டார்கள்

இனி மூன்றாவது ஒரு நீதிபதி விசாரிப்பாராம், அவரும் என்ன சொல்வார் என நினைக்கின்றீர்கள்? சட்டசபை விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என அவர் போக்கில் செல்ல வாய்ப்பு பிரகாசமாக உண்டு

சபரிமலை ஐயப்பசாமிக்கு 18 படி மகா முக்கியம் என்பார்கள், அதை தாண்டித்தான் அவரை அடையமுடியும் என்பார்கள்

அப்படி எடப்பாடி சாமிக்கு 18 எம்.எல்.ஏக்களை தாண்டித்தான் நிம்மதி போலிருக்கின்றது

சாமி விவகாரங்கள் எல்லாம் இப்படித்தான்


 

Image may contain: 1 person, close-upஅடேய் தமிழ்நாட்டு பன்னி கைய்ஸ், என்னையாடா மீம்ஸ் போட்டு கலாய்க்கிறீங்க, சென்னக்கு வந்தா பலூனா விடுறங்க..

நேத்து மட்டும் எப்படி எல்லா கலாய்ச்சீங்கடா, விடுவேனா?

எப்படி வச்சேன் ஆப்பு பாத்தீங்களாடா

“அடேய் தமிழ்நாட்டு பன்னி கைய்ஸ், என்னையாடா மீம்ஸ் போட்டு கலாய்க்கிறீங்க, சென்னக்கு வந்தா பலூனா விடுறங்க..ண்டனை உங்களுக்கு கிடையவே கிடையாதுடா”

 


இந்திய பிரதமருக்கு ஏகபட்ட சவால்கள் உண்டு, சீனா கொடுக்கும் சவால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் சவால், இலங்கை சீனாவினை உள்ளே விட்டு அதுகொடுக்கும் சவால் என ஏராளம்

அதுபோக இந்தியாவில் தீவிரவாதம், ஊழல், வறுமை என ஏகபட்ட சவால்கள் எல்லாம் உண்டு

அந்த சவாலை ஏற்காமல், கிரிக்கெட் வீரர் கோலியின் சவாலை ஏற்று அடிபட்ட தவளை போல மல்லாக்க கிடக்கின்றார் மோடி

இந்த அழகில் குமாரசாமியினை வேறு சவாலுக்கு இழுத்தாராம், தைரியமிருந்தால் மும்பை சிவசேனை முதல்வரை இழுத்திருக்கட்டும் பார்க்கலாம்? பிய்த்துவிடுவார்கள்

இந்த வெட்டி விளம்பரங்களை விட்டுவிட்டு வேறு நல்ல சவால்களில் பிரதமர் வென்று காட்டலாம்