எதற்கு எடுத்தார்கள் என்றே தெரியவில்லை

தர்மபிரபு என்றொரு படத்தினை எதற்கு எடுத்தார்கள் என்றே தெரியவில்லை

பொருந்தாத இரு தலைவர்களான காந்தியினை, நேதாஜியினை ஒன்றாக வைத்து கருத்து கேட்டதிலே டைரக்டரின் அறிவு பல்லிளித்தது

கடவுளே இல்லை என சொன்ன பெரியார் எமலோகத்தில் இருந்ததெல்லாம் என்னவகையோ?

கருமாந்திரம்

ஆனால் இந்து தெய்வங்களை இப்படி எல்லாம் கிண்டல் செய்து , இந்துக்களின் நம்பிக்கையினை சீண்டமுடிகின்றது

ஆனால் பைபிள் சொல்லும் சொர்க்கம், இஸ்லாம் சொல்லும் மேலுலகம் பற்றி எல்லாம் படம் எடுப்பார்களா? எடுத்துவிட்டு டைரக்டர் இருக்க முடியுமா?

இந்து தெய்வம் என்றால் அவ்வளவு இளக்காரம்? இந்துக்கள் என்றால் அவ்வளவு நகையாடல்

இருக்கட்டும்

அந்த டைரக்டரும், தயாரிப்பாளனும் ஒரு நாள் உண்மையான எமனிடம் சிக்காமலா போய்விடுவான்?