எதற்கெடுத்தாலும் முன்னேறிய நாடுகளை பார் என்கின்றோம்
எதற்கெடுத்தாலும் முன்னேறிய நாடுகளை பார் என்கின்றோம், ஆனால் அங்கு நடக்கும் விஷயங்கள் இந்தியா அளவு உண்டா என்றால் நிச்சயம் இல்லை, பல மடங்கு மோசம்
ஒரு இடம் அரசுக்கு சாலைக்கோ இல்லை இதர விஷயங்களுக்கோ தேவை என்றால் உடனே அவர்கள் எடுத்துகொள்ள சட்டம் இருக்கின்றது, மக்கள் மறுபேச்சு பேசமுடியாது
சீனா இதில் முதலிடம் விளைநிலமோ விளையா நிலமோ வீடோ எது என்றாலும் அரசுக்கே உரிமை, இன்னும் ஏராளமான நாடுகளில் இதுவே நிலை
ஆனால் அங்கு குறிப்பிட்டு சொல்லும் விஷயம் ஒரு நிலத்தை கையகபடுத்தும்பொழுது அம்மக்களுக்கு மாற்று இடங்களை கைகாட்டுகின்றார்கள், வங்கிகடன் இருந்தால் ரத்து செய்கின்றார்கள்
ஓரளவு பாதுகாப்பான வாழ்லை சூழலை மக்களுக்கு உருவாக்கிவிட்டு அந்நிலங்களை கையகபடுத்துவார்கள்
இதனால்தான் இதுமாதிரி விஷயங்கள் ஏராளம் நடந்தாலும் அது அங்கெல்லாம் சிக்கலே இல்லை, சத்தமும் வராது
இங்கும் அதனை செய்யலாம் மாறாக யுத்த காலத்தில் அவசரமாக மக்களை வெளியேற்றி ராணுவ பாதை அமைப்பது போல செய்வதுதான் கொஞ்சமும் சரியே இல்லை
பாஜக ஓர் பயங்கரவாத அமைப்பு. துணிச்சல் இருந்தால் அவர்கள் எங்கள் கட்சியினரை தொட்டுப் பார்க்கட்டும் : மம்தா
பயங்கராவாத அமைப்பிற்கே சவால்விடும் மம்தா கட்சி எவ்வளவு பயங்கரமான அமைப்பாக இருக்க வேண்டும்? அம்மாடி….
ஏம்பா மனுஷபுத்திரா,
ஸ்டாலின் திருவரங்கம் கோவில் வருகை பற்றி உமது ஸ்டைலில் 10 பக்கத்திற்கு எழுதும் பார்க்கலாம்…
கியூபா சென்றடைந்தார் ஜனாதிபதி கோவிந்த்
அதானே, எவ்வளவு நாள்தான் இந்திய பிரதமரே உலகம் சுற்றுவார்? பின் ஜனாதிபதி பதவிக்கு என்னதான் மரியாதை