எதுவுமே எழுதமாட்டோம்

பேருந்து ஓட்டுநர் தாக்கபட்டால் மொத்த பேருந்து ஓட்டுநரும் வேலை நிறுத்தம் செய்கின்றாகள்

இந்த டாக்டர்களில் ஒருவர் தாக்கபட்டால் நாடெல்லாம் டாக்டர்கள் போராட்டம் செய்கின்றார்கள்

எல்லா உழைக்கும் இனங்களிலும் இந்த ஒற்றுமை உண்டு

ஆனால் இரு “உழைக்கும்” இனங்கள் மட்டும் அப்படி அல்லவே அல்ல‌

முதலாவது எழுத்தாளர் இனம், சக தொழிலாளன் தாக்கபட்டால் அதை கண்டித்து இனி நாங்கள் எழுதவே மாட்டோம் என வேலை நிறுத்தம் செய்வார்களா?

மாட்டார்கள், மாறாக கூடுதலாக உழைத்து எழுதி தள்ளுவார்கள். அவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

இன்னொரு இனம் அரசியல்வாதி இனம், சக அரசியல்வாதியினை நைய புடைத்தாலும் அதை கண்டித்து எந்த அரசியல்வாதியும் வேலை நிறுத்தம் செய்ததே இல்லை

இந்த ஜெயமோகன் தாக்காபட்டதை கண்டித்து சக எழுத்தாளர்கள் “எதுவுமே எழுதமாட்டோம்” என‌வேலை நிறுத்தம் செய்தால் இந்த சமூகத்துக்கு மிக நல்லது