எத்தனை நாளைக்கு இவரால் 131 ஓநாய்களை பாதுகாத்துவிட முடியும்?

இத்தனை களபேரத்திற்கு பின் சசிகலா பதவிக்கு வந்து என்ன நிம்மதியாக இருந்துவிட போகின்றார்?

எத்தனை நாளைக்கு இவரால் 131 ஓநாய்களை பாதுகாத்துவிட முடியும்?

ஆட்சிக்கு வந்தாலும் என்றேனும் ஒரு நாள் வீழ்த்தவே படுவார். ஜெயாவிற்கு பன்னீர் போல சசி தனக்கொரு பினாமி முதல்வரை வைத்தாலும் அவரும் விசுவாசமாக இருந்துவிடுவாரா என்ன?

கொஞ்ச நாளில் அவரும் சசிகலாவிற்கு எதிராக மாறித்தான் போவார், அது அரசியல் விதி.

சசிகலா பினாமி வந்தாலும், ஏன் சசிகலாவே வந்தாலும்..

வருங்காலத்தில் சசிகலா காட்டியா வோட்டு வாங்குவார்கள்? அப்படி காட்டிவிட்டால் ஒரு வோட்டு வாங்க முடியுமா?

உறுதியாக சொல்லலாம், ஒரு நாளோ அல்லது ஒரு மாதமோ முதல்வராக மட்டுமே சசிகலாவால் இருக்க முடியுமே தவிர, நிம்மதியாக நிரந்தரமாக இருப்பதெல்லாம் சாத்தியமே இல்லை

இந்த எம் எல் ஏ கடத்தல் எல்லாம் 30 வருடத்திற்கு முன்பு இருந்த அரசியல், இன்னும் அது கை கொடுக்குமா என்ன?

தன் தலையில் மண்ணை அல்ல, கல்லை தூக்கிபோடும் அபத்தங்கள் இவை, புத்தியுள்ள‌ அரசியல்வாதி இதனை எல்லாம் செய்வானா?

விடியலை பார்க்க போகின்றேன் என மேற்கு நோக்கி ஓடுகின்றார் சசிகலா, முடிந்தால் சூரியன் அஸ்தமிக்கும் போது சில நொடிகள் அவர் பார்கலாம் அவ்வளவுதான்

அதோடு பெரும் அஸ்தமனம், மறுபடி விடிவதெல்லாம் சாத்தியமே இல்லை