எந்த காமராஜர்?
காமராஜரை முதலில் நாடார்களிடமிருந்து காப்பாற்றவேண்டும், இல்லாவிட்டால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து “காமராஜர் நாடாருக்காக அரிவாள் எடுத்து 50 பேரை வெட்டினார்..” எனும் அளவிற்கு வரலாற்றினை மாற்றிவிடுவார்கள்.
இயேசு சாகும்பொழுது இரு கொலைகாரர்களுக்கு நடுவில் இருந்தாராம்
அப்படி காமராஜர் எப்பொழுதும் இப்பக்கம் கராத்தே செல்வின், அப்பக்கம் வெங்கடேசபண்ணையாருடனே போஸ் கொடுக்கின்றார்
வெங்கடேசனும்,செல்வினும் நாட்டுக்காக எல்லையில் சாகசம் செய்தவர்களா? இந்த தமிழகத்திற்காவது ஏதும் செய்தார்களா என்றால் பதிலிருக்காது
விரைவில் மேலே கன்னியாகுமரி முத்துலிங்கம் படமும், கீழே என்கவுண்டரில் கொல்லபட்ட ரவுடி கபிலன் படமுமாக, சுற்றிலும் கொலைகாரர்கள் நடுவில் காமராஜர் ஒளிவிடும் நாள் வந்துவிடும்
இப்பொழுதே போலிஸ் துரத்தும் ராக்கெட் ராஜாவுடன் தான் காமராஜர் படம் வந்துகொண்டிருக்கின்றது
எந்த காமராஜர்?
தன் குடும்பத்து வாலிபன் ஒரு வழக்கில் சம்பந்தபட்டிருப்பது தெரிந்து, தேடிபிடித்து அவனை உள்ளே தள்ளிய அந்த காமராஜரின் படம்
ஆக விரைவில் காமராஜரை பெரும் கொலையாளி என வரலாறு சொல்லாமல் இருக்கவேண்டுமானால், இந்த நாடார்களிடமிருந்து அவரை காப்பாற்றவேண்டும்
அய்யா வைகுண்டர், தியாகி சங்கரலிங்கம், ம.பொ.சி வரிசையில் அவரை வைத்தாலாவது ஒரு அர்த்தம் உண்டு
செல்வின், வெங்கடேசன், ராக்கெட் ராஜா , சரத்குமார் வரிசையில் அவரை வைத்தால் என்ன சொல்வது?
அது அவருக்கு அவமானமே தவிர நிச்சயம் பெருமையில்லை..
(இனி நெல்லை பஸ் நிலையத்திற்கும், நாகர்கோவில் பஸ் நிலையத்திற்கும் வரசொல்லி
நிறைய அழைப்புகள் வரும்….
🙂 )