எந்த ராக்கெட் ராஜா?
நெல்லை பகுதிகள் சாதிய கொலைகள், கலவரங்களுக்கு பெயர் பெற்றது. உண்மையில் சாதிவெறியால் கொலை நடக்குமா என்றால் இல்லை
யாராவது இருவர் வியாபார விஷயமாக மோதுவார்கள், அவர்களுக்கு கூலிபடையாக சிலர் வருவர் அவர்கள் வெட்டிகொள்வது சாதிகொலை என அறியபட்டு அது கலவரமாகும்
கராத்தே செல்வின், வெங்கடேஷ் பண்ணையார், முத்துலிங்கம், ஜாண் பாண்டியன், பசுபதி பாண்டியன், கட்டதுரை போன்ற பிரபல ரவுடிகள் எல்லாம் இப்படித்தான் உருவானார்கள், அவர்கள் தெரிவார்களே தவிர அவர்கள் பின்னால் இருப்பவர்கள் தெரியமாட்டார்கள்
அப்படிபட்ட நெல்லையில் நேற்றும் கொலை நடந்தாயிற்று, எதனால் என்றால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தொடர்பாக இது நடந்திருக்கின்றதாம்
இது நல்ல வேளையாக ஜாதிகலவரமாக மாறவில்லை, அதாவது மக்களுக்கு உண்மை புரிந்துவிட்டது போல் தெரிகின்றது
இந்த கொலையின் பிராதன குற்றவாளியாக ராக்கெட் ராஜா என்பவர் தேடபடுகின்றாராம்
எந்த ராக்கெட் ராஜா?
கொஞ்ச நாளைக்கு முன்பு என்கவுண்டர் மிரட்டல் வந்ததால் நாடார் சங்கங்கள் எல்லாம் சென்னையில் ஒப்பாரி வைத்தது அல்லவா? அந்த ராக்கெட் ராஜா
அதாவது ராக்கெட் ராஜா மகா உத்தமன், அப்பாவி அவரை சும்மா சுட்டு கொல்ல போலீஸ் தேடுகின்றது என சொன்னார்கள் அல்லவா? அவரே தான்
இப்பொழுது காவல்துறை தீவிரமாக அவரை தேடுகின்றது, ஏதும் நாடார் சங்கங்கள் ஒப்ப்பாரி வைத்தால் முதலில் என்கவுண்டர் செய்ய வேண்டியது ராக்கெட் ராஜாவினை அல்ல.