எனக்கு முன் ஜாமீன் வேண்டும் : சீமான்
https://www.facebook.com/savukkunews/videos/1918013258454815/
அய்யா திருச்சி நீதிபதி, இதை பார்த்துவிட்டு முடிவெடுங்கள்…
உங்களைத்தான் அங்கிள் சொல்லுகின்றார். தைரியம் இருந்தால் முன் ஜாமீனை ரத்துசெய்யுங்கள் பார்க்கலாம்
திருச்சியில் சண்டை நடந்த இடத்தில் நான் இல்லை, எனக்கு முன் ஜாமீன் வேண்டும் : சீமான்
அய்யா ஜட்ஜய்யா, எசமான் நல்லா இருப்பிய
இந்த ஆள் பல்டி அடிக்கிறதுல பெரிய ஆளுங்கோவ், 10 வருஷமா சொல்லாத பொய் இல்ல அடிக்காத பல்டி இல்ல
முதல்ல எல்லாம் பேசுவார் அப்புறம் நான் அப்படி பேசவில்லை அது அறியாமை என்பார்
முத்துராமலிங்க தேவரை ஆதரித்துவிட்டு பின்வாங்கியது, திராவிட கழக மேடைகளில் நாத்திகம் பேசிவிட்டு பின் முப்பாட்டான் முருகன் என வேல்பிடித்தது என ஏகபட்ட விஷயங்கள் உண்டு
விஜயலட்சுமி விவகாரம் அவரின் தனிபட்ட விஷயம் என்பதால் நாங்கள் ஒன்றும் சொல்லமாட்டோம்
சமீபத்தில் கூட சென்னையில் போலீஸ்காரரை இவர் கட்சியினர் அடிக்க, இவரோ அடித்தது கட்சிக்காரன் இல்லை என்றார்
5 ஆண்டுகளாக பிரபாகரனுடன் ஆமைகறி தின்றேன் என சொல்லிவிட்டு கடந்தவாரம் அது நகைச்சுவைக்கு சும்மா சொன்னேன் என்றவர்
இப்பொழுது சம்பவம் நடந்த இடத்தில் இருந்துவிட்டு இப்பொழுது இல்லை என்கின்றார்
இவரின் பழைய பேச்சுக்களை பாருங்கள் எசமான், தொலைச்சிபுடுவேன், அழிச்சிருவேன், கைய ஒடிப்பேன், காலை உடைப்பேன், வாயில் மிதிப்பேன், கற்பழிச்சிருவேன், கொன்னுருவேன் என்பது தவிர ஒன்றுமிருக்காது
அதனால் இந்த மனிதரை விடாதீர்கள், அப்படியே இன்னும் ஒரு கோரிக்கை
இன்னும் கொஞ்சம் மிரட்டுங்கள், “அய்யய்யோ நான் பிரபாகரனை பார்த்ததே இல்லை, எல்லாம் சும்மா கூட்டம் சேர்க்க சொன்னேன், இலங்கை எங்கே இருக்குண்ணு எனக்கு தெரியாது” என கதறுவார்
தயவு செய்து அந்த பொன்னான காட்சியினை தமிழகம் காண ஒரு வாய்ப்பு கொடுங்கள்
நான் மாவோ வழியில் புரட்சி செய்கின்றேன் : இரு மாதங்களுக்கு முன்பு சைமன்
மாவோ எந்த காலத்தில் அய்யா முன் ஜாமீன் கேட்டு ஒளிந்திருந்தார்?
நாமளும் காங்கிரச திட்டிருக்கோம், பிராமணர் தமிழர்னு சொல்லிருக்கோம், கலைஞரை மானாவாரியா திட்டிருக்கோம்,
ஆக அண்ணனுக்கும் அவர் கட்சிக்கும் ஆதரவாத்தான் பேசியிருக்கோம்.
வேற என்ன கவலை ? அண்ணன் நிச்சயம் ஆதரிப்பாரு
இனி எஸ்.வீ சேகர் சேகர் அண்ணனுக்கு ஆள் அனுப்பி அவர் கூட சேர்ந்திருவோம், …..த்தா எவன் பிடிக்கிறான்னு பார்த்துருவோம்??