எனது கருத்துகள் தவறாக சித்திரிக்கப்படுகின்றன: ரஜினி
மிஸ்டர் ரஜினி
காலாவிற்காக கன்னடத்தில் கெஞ்சிய நீங்கள், காவேரிக்காக மட்டும் மவுன போராட்டம் ஏன் நடத்தினீர்
காவேரியினை திறந்து விடுங்கள் என்றாவது கன்னடத்தில் பேசினீரா?
ஏன் பேசவில்லை? இப்படிபட்ட சுயநலவாதியா நீங்கள்
உமது படம் ஓடுவதற்கு கன்னடனிடம் கெஞ்சுவதும், காவேரி விவகாரத்தில் மவுன விரதம் இருப்பதும் தமிழர் நெஞ்சில் எவ்வளவு வெறுப்பினை ஏற்படுத்தும் என்பதை நினைத்தீரா?
இதெல்லாம் மனசாட்சி உள்ள மனிதன் செய்யும் விஷயமா? துளி மனசாட்சி இருந்தாலும் இப்படி செய்வீரா?
ச்சீ..தூதூ… இப்படி பணத்திற்காக மட்டும் உடம்பை சுமக்கும் ஈனபிறவியா நீங்கள்??
நெஞ்சு அறிய இப்படி ஒரு பச்சோந்திதனம், இப்படி ஒரு அயோக்கியதனம் செய்துவிட்டு உமக்கு என்னய்யா ஆன்மீகம்?
தயவு செய்து இந்த ராகவேந்திரர், பாபாஜி போன்றோரை வணங்கி அவர்களை கொச்சைபடுத்த வேண்டாம்
உமக்கு கூவத்து கரை போதும், புனிதமான இமயமலை வேண்டவே வேண்டாம்
மிஸ்டர் ரஜினி கர்நாடகாவில் சமூக விரோதிகளே இல்லையா? வாட்டாள் நாகராஜ் என்ன தியாகியா?
அவனை சமூக விரோதி என சொல்ல ஏன் மனம் வரவில்லை? உங்கள் உடலில் ஓடுவது கன்னட ரத்தம் என்பதலா?
சொல்லுங்க..
காலா’ படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: தனுஷ் நீதிமன்றத்தில் மனு
முதலில் இயக்குநர் ரஞ்சித்திற்கு பாதுகாப்புகொடுங்கள், படம் பார்த்த வெறுப்பில் வெளிவரும் ரஜினி ரசிகர்கள் கொலைவெறியில் அவரைத்தான் தேடி செல்வார்கள்
எனது கருத்துகள் தவறாக சித்திரிக்கப்படுகின்றன: ரஜினி
ஒழுங்காக பேசினாலே ஆயிரம் கோணங்களில் சித்தரிப்பார்கள், இவர் உளறி கொட்டினால் விடுவார்களா?
உளறுவதில் கூட கோபம் வந்தால் எப்படி???
அதெல்லாம் இருக்கட்டும், உங்கள் கருத்து என்றால் என்ன சார்? எதை உருப்படியாக சொன்னீர்கள்??
2019-ல் பிரதமர் மோடியைத் தோற்கடிக்க உலகளாவிய சதி: கர்நாடகா பாஜக தலைவர்
ஆக உலகமே சேர்ந்து சிரியாவினை ஐ.எஸ் இயக்கத்திடம் இருந்து மீட்டது போல இந்தியாவினை பஜகவிடமிருந்து மீட்க போகின்றார்களாம்
நல்ல விஷயங்களை யார் செய்தால் என்ன?
தன்னை வீழ்த்த விரும்பும் உலக நாடுகளுக்குத்தான் மாதம் 4 முறை பிரதமர் பறக்கின்றார், ரொம்ப வெகுளியான பிரதமர் போலிருக்கின்றது