என்னதான் செய்கின்றது பீட்டா?
நியுசிலாந்தில் இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன, நிச்சயமாக மானிட தவறு என்கின்றார்கள்
பெரும் உயிர்வதை அங்கு நடந்திருக்கின்றது
ஆனால் அங்கு பீட்டாவினையும் காணோம், ராதா ராஜன் என்பவரையும் காணவில்லை, ஒரு புளூகிராஸ் அமைப்புகளையும் காணவில்லை
காரணம், இந்த திமிங்கல சாவுக்கு காரணம் பெரும் கைகள் எனும் சர்ச்சை வருகின்றது,
ஆக பீட்டா நம் ஜல்லிகட்டு என்றால் பாயும், திமிங்கலங்கள் சாவு என்றால் வாயினை மூடி கொள்ளும்.
சென்னையில் எண்ணெய் கசிந்து ஆமைகளும் மீன்களும் சாகும் பொழுதும் பீட்டாவினை காணவே இல்லை, ஏன் இந்த மவுனம்?
என்னதான் செய்கின்றது பீட்டா?
பாலமேடு, அலங்காநல்லூர் வீடியோக்களை படையப்பா ரம்யாகிருஷ்ணன் போல பலமுறை பார்த்து முறைத்து கொண்டிருப்பார்களோ?
தமிழகம் பீட்டாவிற்கு எதிராக பொங்கியதில் எவ்வளவு அர்த்தம் இருந்திருகின்றது